சுதந்திரதின விழாவையொட்டி ரயில்வே நிலையங்களில் சோதனை!

சுதந்திரதின விழா நெருங்கி வருவதையொட்டி நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் சோதனை நடத்தினர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 12, 2018, 06:01 PM IST
சுதந்திரதின விழாவையொட்டி ரயில்வே நிலையங்களில் சோதனை! title=

சுதந்திரதின விழா நெருங்கி வருவதையொட்டி நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் சோதனை நடத்தினர்!

நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி அவர்கள் டெல்லி செங்கோட்டையில்  தேசிய கொடி ஏற்றி உரை நிகழ்த்தவுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளதால் பயங்கரவாத செயல்கள் ஏதும் நிகழாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்களிலும், அரசு சார்பில் சுதந்திர தினம் நடைபெற உள்ள இடங்களிலும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்!

Trending News