ஸ்பெயின் தாக்குதல்: இந்தியர்களை தொடர்பு கொள்ள அவசர உதவி எண் +34-608769335

Last Updated : Aug 18, 2017, 09:15 AM IST
ஸ்பெயின் தாக்குதல்: இந்தியர்களை தொடர்பு கொள்ள அவசர உதவி எண் +34-608769335 title=

பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்களை +34-608769335 என்ற அவசர உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில், திடீரென்று பொதுமக்கள் மீது பயங்கர வேகத்தில் சுமார் 106 கி.மீட்டரில் வந்த கார் மோதியதில்(இரண்டு முறை) குறைந்தபட்சம் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

முதல் சம்பவம் நேற்று, மிக பிரபலமான தெருவில் பார்சிலோனாவின் கூட்டம் நிறைந்த பிரபலமான தெருவில் தீவிரவாதி நடத்திய தாக்குதலி 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முதல் சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்குப் பின், மற்றொரு கார் கேம்பிரில்களின் ஸ்பானிஷ் கடலோர ரிசார்ட்டில் இன்று போது மக்கள் மீது மோதியது. இந்த இரண்டாவது தாக்குதலில் பொதுமக்கள் 6 பெரும், ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தனர். ஆனால் காரை ஓட்டிவந்தவன் பிடிபடவில்லை. தற்போது பார்சிலோனா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பார்சிலோனா தாக்குதலில் 18 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் பாதிக்கப்பட்ட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் யாரும் காயம் அடையவில்லை. எனினும் தொடர்ந்து ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்துடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

அவசர உதவிக்காக ஸ்பெயினில் உள்ள இந்தியர்களை தொடர்பு கொள்ள +34-608769335 என்ற அவசர உதவி எண்ணையும் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். 

பார்சிலோனா தாக்குதலுக்கு பல சர்வதேச தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News