தந்தையின் துரோகம் அம்பலமாக காரணமான ஆன்லைன் வகுப்பு.. எப்படி தெரியுமா..!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக,  பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்கின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2020, 09:50 PM IST
  • கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்கின்றனர்.
  • புகாரின் அடிப்படையில் போலீசார் கணவன், மனைவி இரண்டு பேரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தந்தையின் துரோகம் அம்பலமாக காரணமான ஆன்லைன் வகுப்பு.. எப்படி தெரியுமா..!!! title=

கொரோனா தொற்று பரவல் காரணமாக,  பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்கின்றனர். 

அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள, லேப்டாப், கம்ப்யூட்டர், டாப்  அல்லது செல்போன் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். 

இந்நிலையில் கர்நாடகாவில் (Karnataka), தந்தையிடம் இருந்து பாடம் படிப்பதற்காக செல்போனை வாங்கிய  பயன்படுத்திய ஒரு மாணவிக்கு, அவரின் செல்போனில் பார்த்த வீடியோ அதிர்ச்சியை கொடுத்துள்ளது. செல்போனில் தனது தந்தை தனது உறவினர் பெண் ஒருவருடம் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.

கர்நாடகாவின், நாகமங்களா மாவட்டத்தின் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் 48 வயது மதிக்கத்தக்க ஆணுக்கு திருமணமாகி மனைவியும், 17 மற்றும் 15 வயதில் 2 மகள்களும் உள்ளனர். அவரது மூத்த மகள் 12-ம் வகுப்பில் படித்து வருகிறார். கொரோனா (Corona virus) பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால், அதில் பங்கேற்க அவரது மூத்த மகள் தந்தையின் செல்போனை பயன்படுத்தினார்.

ஆன்லைன் வகுப்பு முடிவடைந்த பிறகு, சிறிது நேரம் செல்போனில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை பார்த்தார். அப்போது அதில் ஒரு வீடியோவை கண்ட மாணவிக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. அந்த வீடியோவில் அந்த மாணவியின் தந்தை, அவரது உறவுக்கார பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த, அந்த மாணவி உடனடியாக செல்போனில் உள்ள அந்த வீடியோவை, தனது தாயிடம் காண்பித்தார்.

வீடியோவை பார்த்து அதிர்ச்சியான மாணவியின் தாய் சம்பவம் குறித்து கணவரிடம்  கேட்ட போது, அவரது கணவர், அதற்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தினால், மிகவும் கோபமடைந்த அந்த பெண்,  மாண்டியா போலீஸ் நிலையத்திலும், அங்குள்ள மகளிர் அமைப்பிலும் புகார் கொடுத்தார்.

ALSO READ | கொரோனா காலத்தில் வேலை இழப்பு, சம்பள குறைப்பு அதிகம் இருந்ததா.. உண்மை என்ன..!!

புகாரின் அடிப்படையில் போலீசார் கணவன், மனைவி இரண்டு பேரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால், அந்த பெண், தனக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்றும், அவருடன் இனி நான் வாழ மாட்டேன் என்றும் தனது மகள்களை அழைத்து கொண்டு தனியாக செல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு துரோகம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு போலீசார், ஒரு பெண்ணுடன் தகாத முறையில் உறவு வைத்திருப்பது சட்டப்படி குற்றம் அல்ல என்பதால், அதற்காக நடவடிக்கை எடுக்க முடியாது என கூறியுள்ளனர். 

மேலும், கணவன், மனைவி இரண்டு பேரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் மாண்டியா பகுதியை சேர்ந்த மகளிர் அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ| Australia island: இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கும் சீனா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News