மனைவியின் தங்கை மீது மோகம்... சந்தேகப்பட்ட அத்தான் - 19 வயது பெண் கொலை!

Crime News: தனது மனைவியின் தங்கையான 19 வயது பெண், தன்னுடைய பாலியல் உறவு விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பீர் பாட்டிலால் தாக்கி, குளத்தில் தள்ளி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 15, 2023, 08:20 PM IST
  • கடந்த ஜூன் 10ஆம் தேதி கொலை சம்பவம் நடந்துள்ளது.
  • ஜூன் 11ஆம் தேதி பெண்ணின் உடல் குளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
  • தற்கொலை என கூறப்பட்ட நிலையில், கொலை என சந்தேகம் எழுந்தது.
மனைவியின் தங்கை மீது மோகம்... சந்தேகப்பட்ட அத்தான் - 19 வயது பெண் கொலை! title=

Crime News: இந்த வார தொடக்கத்தில் தெலங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் 19 வயது நர்சிங் மாணவி சிரிஷா என்பவர் உயிரிழந்தார். இவர் தற்கொலை மேற்கொண்டார் என கூறப்பட்ட நிலையில், அவரது சந்தேகம் எழுந்தது. 

சிரிஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், பரிகி போலீசார் உயிரிழந்த பெண்ணின் மைத்துனரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 25 வயதான எர்ரகடப்பள்ளி அனில் உயிரிழந்த பெண்ணின் மீது ஒரு வருடமாக காதல் கொண்டிருக்கிறார். தொடர்ந்து, அந்த பெண் வேறு ஒருவருடன் உறவில் ஈடுபடுகிறார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிரிஷாவுக்கு ஏற்பட்ட அவமானம் 

காவல் துறையினரின் கூற்றுப்படி, சிரிஷாவின் தாயார் அண்டாஜா தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து, விகாராபாத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சிரிஷா வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (ஜூன் 10) இரவு, சிரிஷா தனது தந்தை ஜங்கையா மற்றும் இளைய சகோதரர் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் வீட்டில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி சிரிஷாவின் சகோதரி லலிதா, தனது கணவர் அனிலிடம் தெரிவித்தது. அவரும் உடனடியாக அங்கு வந்தார். இந்த வாக்குவாதத்தால் அனில் மற்றும் ஜங்கையா சிரிஷாவை தாக்கி அவமானப்படுத்தினர்.

சனிக்கிழமை இரவு முடிந்து அனில் வெளியேறியபோது, சிரிஷா வீட்டின் பிரதான கதவை வெளியில் இருந்து பூட்டிக்கொண்டு அந்த அங்கிருந்து வெளியேறினார். இதுகுறித்து தம்பி ஸ்ரீனிவாஸ், லலிதா மற்றும் அனில் ஆகியோருக்கு தெரிவித்ததையடுத்து, அவர்கள் அங்கு வந்தனர். அனில் லலிதாவை வீட்டில் விட்டுவிட்டு, சிரிஷாவை தேடி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

குளத்தில் தள்ளி கொலை

"உள்ளூர் கோவில் அருகே சிரிஷாவை பார்த்த அனில், சாலையில் சண்டைப்போட்டுள்ளார். பாலியல் உறவுக்கான தனது விருப்பத்தை சிரிஷா நிராகரித்ததால், சிரிஷா வேறொருவருடன் பேசுகிறார் என்று அவன் கோபமாக இருந்தான். அங்கு கையில் கிடைத்ததை வைத்து சிரிஷாவை தாக்கி, அருகில் உள்ள குளத்திற்கு இழுத்துச் சென்று கொன்றான். அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்த பிறகு, அவர் தண்ணீரில் கை மற்றும் கால்களைக் கழுவிவிட்டு, சிரிஷாவை காணவில்லை என்று பொய் சொல்லி தனது பைக்கில் தனியாக வீடு திரும்பினார்" என்று விகாராபாத் காவல்துறை கண்காணிப்பாளர் என் கோட்டி ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் படிக்க | மத மாற்றத்துக்கு தடையில்லை! மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவு

கொலையா... தற்கொலையா... 

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குளத்தில் சிரிஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவரது உடலில் பல காயங்கள் தென்பட்டதால், போலீசார் கொலையாக சந்தேகித்து வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும், விசாரணையில், சிரிஷா வீட்டின் கதவை வெளியில் இருந்து பூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை அறிந்தனர். 

மேலும் அவர் குளத்தை நோக்கி தனியாக நடந்து செல்வதைக் கண்டதாக நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் கூறியபோது, ​​போலீசார் அதை தற்கொலை வழக்காகக் கருதத் தொடங்கினர். வீட்டில் ஏற்பட்ட அவமானம் மற்றும் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை

அவரது தொலைபேசியை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து மேலும் விசாரணை, குடும்ப உறுப்பினர்களின் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. "குற்றம் சாட்டப்பட்டவர் கொலையை செய்ததை ஒப்புக்கொண்டார்" என்று எஸ்பி கூறினார்.

அனில் அவரது முகத்தை பீர் பாட்டிலால் தாக்கியதில், மூக்கு மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கினார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பதை உறுதி செய்துள்ளார், ஏனெனில் இது ஏற்கனவே சந்தேகிக்கப்பட்டது, என்றார்.

மேலும் படிக்க | பிபோர்ஜாய் அதி தீவிர புயலாக மாறியது! மும்பை & துவாரகாவில் கனமழை தொடங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News