Exit Poll Results: மூன்று மாநில தேர்தல்களிலும் யார் யார் முன்னிலை... Zee News - Matrize கருத்துக்கணிப்பு

Zee News - Matrize Exit Poll Results: திரிபுரா, மேகலாயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுகளும் முடிந்துவிட்ட நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை Zee News-Matrize இணைந்து வெளியிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 28, 2023, 12:41 AM IST
  • திரிபுராவில் கடந்த பிப். 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
  • மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப். 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
  • மூன்று மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெறும்.
Exit Poll Results: மூன்று மாநில தேர்தல்களிலும் யார் யார் முன்னிலை... Zee News - Matrize கருத்துக்கணிப்பு title=

வடக்கிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப். 16ஆம் தேதி நடைபெற்றது. பிற வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து ஆகியவற்றில் உள்ள தலா 60 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 27) நடைபெற்றது. 

இந்த மூன்று மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில், தற்போது, இந்த மூன்று மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய, Zee News-Matrize கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், மூன்று மாநிலங்களிலும் மீண்டும் ஆளும் பாஜகவே அதிக இடங்களை கைப்பற்றும் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மேகாலயாவில் பெரும்பான்மை இன்றி தொங்கு சட்டப்பேரவை அமையேவே அதிக வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திரிபுரா

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி 29-36 இடங்களைக் கைப்பற்றும் என்று Zee News-Matrize வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 13-21 இடங்களையும், திப்ரா மோதா கட்சி 11-16 இடங்களையும், மற்றவை 0-3 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த வடகிழக்கு மாநிலமான திரிபுராவை, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கடந்த சட்டப்பரேவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனதாக்கியது. அங்கு மொத்தம் 60 இடங்களில் 44 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை உடன் கடந்த முறை ஆட்சியமைத்தது.

மேலும் படிக்க | NEET PG: நீட் முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடக்குமா? நடக்காதா?

திரிபுரா 2023ஆம் ஆண்டு 60 தொகுதிகளிலும் பிப்ரவரி 16 ஆம் தேதி ஒரே இடத்தில் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. தகுதியான 28.14 லட்சம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 24.66 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, தகுதியான வாக்காளர்களில் கிட்டத்தட்ட 88% பேர் மாநிலத்தில் வாக்களித்துள்ளனர். திரிபுரா 2018 சட்டமன்றத் தேர்தலில் 89.38 சதவீதம் பேர் தகுதியான வாக்காளர்களைப் பதிவுசெய்தது. 

அதேசமயம் 2013இல் அதிகபட்ச வாக்குப்பதிவு 93 சதவீதமாக இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், தெற்கு திரிபுராவில் உள்ள மனு சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 92.09 வாக்குகள் பதிவாகியுள்ளன, அதே சமயம் டவுன் பர்தோவலி சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். 80% பங்கேற்பு, அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஆசிஷ் குமார் சாஹாவை எதிர்த்து முதல்வர் மாணிக் சாஹா போட்டியிடுகிறார்.

மேகாலயா 

Zee News-Matrize வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி 21-26 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 8-13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மறுபுறம், பாஜக 6-11 இடங்களையும், காங்கிரஸ் 3-6 இடங்களை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாகலாந்து

தேசிய ஜனநாயக மக்கள் கட்சி - பாஜக கூட்டணி 35-43 இடங்களையும், தேசிய மக்கள் முன்னணி 2-5 இடங்களையு், தேசிய மக்கள் கட்சி 0-1, காங்கிரஸ் 1-3, மற்றவை 6-11 இடங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தம்பிக்கு பதில் தேர்வு எழுதிய அண்ணன் - கைதுக்கு பின் அவர் கொடுத்த விளக்கம் இருக்கே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News