J&K: பாதுகாப்புபடையினர் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு.....

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள லார்ரோ பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே கடுமையான துப்பாக்கிசூடு.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2018, 09:54 AM IST
J&K: பாதுகாப்புபடையினர் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு..... title=

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள லார்ரோ பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே கடுமையான துப்பாக்கிசூடு.....

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள லார்ரோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்துள்ளனர். 

அப்போது, ஒரு வீட்டில்  இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள நிலையில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் கிரால்ஹார் பகுதியில் போலீசாரை தாக்க முயன்ற 2 தீவிரவாதிகள் கடந்த 2 நாட்களுக்கு முன் சுட்டு கொல்லப்பட்டனர்.

 

Trending News