Best Investment: நிலையான வருமானத்தை கொடுக்கும் மாதாந்திர சேமிப்பு திட்டம்..!!

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதோடு, சிறந்த வட்டியுடன் கூடிய பாதுகாப்பான முதலீடு ஆகும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 15, 2021, 12:12 PM IST
  • 18 வயது நிறைவடைந்த நபர்கள் முதலீடு செய்யலாம்
  • உங்கள் கணக்கை 1000 ரூபாய் முதலீட்டில் தொடக்கலாம்.
  • ஒவ்வொரு மாதமும் 2475 ரூபாய் கிடைக்கும்.
Best Investment: நிலையான வருமானத்தை கொடுக்கும் மாதாந்திர சேமிப்பு திட்டம்..!! title=

Post Office MIS: தபால் அலுவலக திட்டங்கள் பாதுகாப்பானவை என்பதோடு, சிறந்த வருமானம் தரக் கூடியவை. தபால் அலுவலகத்தின் திட்டங்களில் மக்களும் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு செய்யும் முதலீட்டில், எந்தவித ஆபத்தும் இல்லை. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த திட்டத்தின் பெயர் போலவே, அது உங்களுக்கு மாதாந்திர வருமானத்தை கொடுக்கிறது.  மாதாந்திர வருமானத் திட்டத்தின் மூலம் உங்கள் பணத்திற்கான முழு உத்திரவாதத்துடன் நல்ல வருமானமும்.

மாத வருமானம் கிடைக்கும்

இந்த அஞ்சலகத் திட்டத்தில், ஆண்டுக்கு 6.6 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதாவது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு, உத்திரவாத தொகையிலிருந்து மாத வருமானத்தைப் பெறத் தொடங்குவீர்கள். நீங்கள் மொத்தமாக ரூ.4.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ.29700 கிடைக்கும். அதனை நீங்கள் மாத வருமானமாக பெற விரும்பினால், மாதத்திற்கு 2475 ரூபாய் கிடைக்கும்.

ALSO READ | Post Office Schemes: பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் முதலீட்டு திட்டங்கள்..!!!

சிறந்த முதலீட்டு திட்டம்

ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் விரும்பும் முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலக மாத வருமானம் ஒரு சிறந்த பாதுகாப்பான திட்டமாகும். இது தவிர, ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த தொகையைப் பாதுகாப்பாக வைத்திருந்தால், அதன் மூலமும் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையைப் பெறலாம். மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம் நிலையான வருமானத்தை பெற விரும்புபவர்களுக்கு இது சிறந்த திட்டம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ், வெறும் 1000 ரூபாயில் கணக்கை  தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒரு நபர் அதிகபட்சமாககணக்கு வைத்திருக்கும் மூன்று பேர்களுடன், ஒரே நேரத்தில் ஒரு கணக்கைத் திறக்கலாம்.

ALSO READ | வங்கி லாக்கர் புதிய விதிகள்; 'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!!

கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்: 

- கணக்க திறக்க, முதலில் நீங்கள் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

- ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஐடி சான்றுக்கு இருக்க வேண்டும்.

- உங்களிடம் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இருக்க வேண்டும்.

- முகவரி சான்று ஒரு அடையாள அட்டை அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரசீது இருக்க வேண்டும்.

ALSO READ | 7th Pay Commission: தீபாவளிக்கு முன் மீண்டும் அதிகரிக்கிறதா ஊதியம்?

- இந்த ஆவணங்கள் அனைத்தும் தயாராக இருந்தால், முதலில் தபால் அலுவலகத்திற்குச் செல்வதன் மூலம், முதலில், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் படிவத்தை நிரப்ப வேண்டும். நீங்கள் அதை ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

- இந்த படிவத்தில் சரியான விவரங்களை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிப்பதன் மூலம், இந்த திட்டத்தில் நீங்கள் எளிதாக ஒரு கணக்கைத் திறக்க முடியும்.

- படிவத்தை நிரப்புவதோடு, நாமினியின் பெயரையும் கொடுக்க வேண்டும்.

- இந்தக் கணக்கைத் தொடங்க, ஆரம்பத்தில் 1000 ரூபாய் பணம் அல்லது காசோலை மூலம் டெபாசிட் செய்ய வேண்டும்.

ALSO READ | ஆதார் அட்டையில் உள்ள போட்டோ நன்றாக இல்லையா; நொடியில் மாற்றலாம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News