LIC Policy வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி, கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

FM Nirmala Sitharaman on LIC Policy: நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யிடம் இருந்து பெரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னதாக எல்ஐசிக்கு அதிக வரி செலுத்தி வந்த மத்திய அரசு, இந்த முறை விதிகளில் பெரிய மாற்றம் செய்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 14, 2023, 10:28 AM IST
  • LIC Policy குறித்து மிகப் பெரிய தகவல் வெளியாகியுள்ளது.
  • பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.
LIC Policy வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி, கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க title=

எல்ஐசி பாலிசி அப்டேட்: நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யிடம் இருந்து பெரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்பு எல்ஐசிக்கு அதிக வரியின் பலனை வழங்கிய மத்திய அரசு, இந்த முறை விதிகளில் பெரிய மாற்றம் செய்துள்ளது, அதன் படி இனி எல்ஐசி பாலிசி எடுத்த பிறகும் மக்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். முன்னதாக வருமான வரி விதிகளின்படி, எல்ஐசியின் பாலிசியை வாங்கினால் வரி விலக்கு பலன் கிடைக்கும். வரி விலக்கு காரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் மிகவும் வலுவான நிலையில் உள்ளன. அத்துடன் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் வரியைச் சேமிக்க மட்டுமே எல்ஐசியின் பாலிசியை எடுப்பார்கள்.

மிகப் பெரிய தகவல் வெளியாகியுள்ளது
இது தொடர்பாக தகவல் அளித்து LIC தலைவர், நிறுவனத்தின் மொத்த வருடாந்திர பிரீமியத்தில் பாதி ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வருகிறது. நிதியாண்டின் இறுதியில், காப்பீட்டு பாலிசிகளை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் மக்கள் தங்களுடைய வரியைச் சேமிக்காமல் காப்பீடு பாலிசிகளில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். 

மேலும் படிக்க | வங்கிகளில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டும்... அபராதம் எவ்வளவு? - முழு விவரம்

பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
முன்னதாக 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பிரீமியத்துடன் பாலிசி முதிர்வுத் தொகைக்கு இனி வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனுடன், அரசாங்கம் நாடு முழுவதும் புதிய வரி விதிப்பு முறையை ஊக்குவிக்கிறது, இதில் வரி விலக்கு இல்லை. அதாவது, வரியைச் சேமிக்க இனி எல்ஐசி பாலிசி எடுப்பவர்கள், எதிர்காலத்தில் அதை எடுப்பதையும் நிறுத்தலாம்.

எல்ஐசியின் வளர்ச்சி பாதிக்கப்படும்
இந்த நிலையில் இனி வரும் காலங்களில் அரசின் இந்த முடிவின் தாக்கம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஏற்படும். மேலும் அதன் நேரடி விளைவு எல்ஐசியின் வளர்ச்சியில் காணப்படும்.

மேலும் படிக்க | Post Office Job: நெருங்கும் கடைசி நாள்... 40 ஆயிரம் காலிப்பணியிடம் - சீக்கிரம் விண்ணப்பிங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News