VoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது?

BSNL நாட்டில் 4G சேவைகளை வழங்க போராடி வருகின்ற போதிலும், அது தனது VoLTE சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது..!

Last Updated : Sep 6, 2020, 12:06 PM IST
VoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது? title=

BSNL நாட்டில் 4G சேவைகளை வழங்க போராடி வருகின்ற போதிலும், அது தனது VoLTE சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது..!

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது இந்நிறுவனம். இந்நிலையில், BSNL இந்தியாவில் 4G சேவைகளை வழங்க போராடி வருகின்ற போதிலும், அது தனது VoLTE சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

BSNL நிறுவனம் ஒடிசாவில் வாய்ஸ் ஓவர் லாங் டர்ம் எவல்யூஷன் சர்வீசஸ் (VoLTE) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் செய்திகளை அனுப்பி புதிய சேவையைப் பற்றி தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இதன் பொருள் விரைவான அழைப்பு இணைப்புடன் HD தரத்துடன் வீடியோ அழைப்புகளை வாடிக்கையாளர்கள் செய்ய முடியும். 

வாடிக்கையாளர்கள் VoLTE சேவைகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் தங்கள் அமைப்பைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு வருடத்தில் இது இரண்டாவது முறையாக நிறுவனம் தனது VoLTE சேவைகளை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக இது கோயம்புத்தூர், கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தென் மண்டலத்தில் தொடங்கப்பட்டது.

ALSO READ | BSNL-லின் ₹.1499 ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம்: என்னென்ன நன்மைகள்...

BSNL VoLTE சேவையை செயல்படுத்துவது எப்படி?

> இந்த சேவைகளைச் செயல்படுத்த, பயனர்கள் ACTVOLTE என டைப் செய்து 53733 க்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டும். 

> அது முடிந்ததும், சேவைகள் 24 மணி நேரத்தில் செயல்படுத்தப்படும். APN அமைப்புகளைச் சரிபார்த்து சேவைகளையும் இயக்கலாம். 

> Android தொலைபேசிகளுக்கு, நீங்கள் அமைப்புகளை சரிபார்க்க வேண்டும், பின்னர் மொபைல் நெட்வொர்க்குகள், பின்னர் APN-யை சரிபார்க்கவும். 

> ஐபோன் தொலைபேசிகளுக்கு, முதலில், நீங்கள் அமைப்புகள் (settings), செல்லுலார் தரவு விருப்பங்கள் (cellular data options) மற்றும் செல்லுலார் நெட்வொர்க்குகள் (cellular networks) ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

BSNL-லின் ரூ.1,499 திட்ட விவரங்கள்

> அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் புதிய திட்டத்தை ரூ.1,499 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 395 நாட்களுக்கு செல்லுபடியாகும். புதிய திட்டம் 24 ஜிபி தரவு, அழைப்பதற்கு 250 நிமிடங்கள் (உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு உட்பட) வழங்குகிறது. 

> இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 100 செய்திகளையும் வழங்கும். பிஎஸ்என்எல் நீண்ட கால திட்டத்தை அறிமுகப்படுத்தும் முதல் ஆபரேட்டர் அல்ல. 

> அதாவது ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற பிற ஆபரேட்டர்கள் இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

> ஏர்டெல் ரூ.1,498 திட்டம், 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த பேக் 24GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 3600 செய்திகளை வழங்குகிறது. 

> வோடபோன் வழங்கும் ரூ.1,499 திட்டம், இது 24GB தரவு, 3600 செய்திகள், வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 சந்தா ஆகியவற்றிற்கான அணுகலை வழங்குகிறது.

Trending News