ப்ருதிவி முத்திரையின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

புத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில் என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? -விவரம் உள்ளே! 

Last Updated : Jun 23, 2018, 05:58 PM IST
ப்ருதிவி முத்திரையின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா? title=

புத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில் என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? -விவரம் உள்ளே! 

நாம் அனைவரும் புத்தரின் கையில் ஒரு முத்திரையை பார்த்திருப்போம். அதை பற்றி என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?. எப்படி யோடிப்போம் நமக்கு தான் நமது வாழ்கையில் இருக்கும் குழப்பத்தை நினைக்கவே நேரம் பத்தாது. இதில், இதைப்பற்றி எப்படி சிந்திப்பது. 

பரவா இல்லை நீங்கள் யோசிக்க வேண்டாம் அந்த முத்திரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். புத்தர்கையில் உள்ள முத்திரையை பிருத்வி முத்ரா என்று கூறுவார்கள். அந்த முத்திரையில் இருக்கும் ரகசியத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்களும் கண்டிப்பாக செய்வீங்க. 

எல்லா பிரச்சினைகளுக்கும் முத்ரா பயிற்சி முறைகள் நல்ல தீர்வு. ஆரோக்கிய குறைபாடுகளுக்கு காரணமான கூறுகளை குறைக்கவும், உறுப்புகளுக்கு தேவையான தனிமங்களை அதிகரிக்கவும் முத்ரா பிருத்வி அவசியமாகிறது. உடல் எடைக்கும், முடி வளர்ச்சிக்குமான சூத்திரம் இதில் மறைந்துள்ளது. 

பிரித்வி முத்ரா செய்யும்முறை:- 

பெருவிரலை மடக்கி மோதிர விரலை அதன்மீது அழுத்திப் பதிய வைக்க வேண்டும். இதுதான் பிருத்வி முத்ரா. தரையில் அமர்ந்து கொண்டு, முதுகை வளைக்காமல் முதலில் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு, பெருவிரலை மடக்கி, அதை மோதிர விரலின் மேலே வைத்து அமுக்கி, பிடித்திருக்க வேண்டும்.

பிரித்வி முத்ராவின் பலன்கள்:- 

> இப்படி நாம் தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வளர்ச்சி உடலில் உள்ள எர்த் எலிமன்ட்சுடன் தொடர்பு கொண்டு நன்றாக முடிவளரும். 

> உடம்பில் உள்ள எர்த் எலிமன்ட்ஸ் பிரித்வி முத்ராவால் உந்தப்படு உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. 

> பிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும் போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது. 

> எலும்புகள், குருத்தெலும்புகள் வலுப்பெறுகிறது. தசை, தோல், சதைப்பற்றுகள் முத்ரா பயிற்சியின் மூலம் பலனடைகிறது. 

> அல்சர், உடல் எரிச்சல் போன்றவற்றுக்கு இந்த ப்ருத்வி முத்திரை மூலம் தீர்வு கிடைக்கிகிறது.

> மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து எளிதாக வெளியே வர பிருத்வி முத்ரா உதவுகிறது.

> நீண்டநாள் சோர்வுக்கு காரணமான சதைப் பற்றுகளை வலிமையாக்குகிறது. 

> தொடர் பயிற்சி மூலம் உடல் உறுதியை மீளப் பெற முடியும்.

> சிறந்த சிகிச்சைக்கான குணாம்சங்களைக் கொண்ட முத்ரா, பாயும் படுக்கையுமாக கிடந்தவர்களை நடக்க வைத்துவிடும். 

> பிருத்வி முத்ராவை நாள் தோறும் 30 அல்லது 40 நிமிடங்கள் செய்து பாருங்கள். அதன் நன்மை நம் கண்களுக்கு புலப்படும். இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்ததால் தான் புத்தரால் இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேருடைய மனதையும் அமைதிப்படுத்தும் கருவியாக மாற முடிந்தது.

 

Trending News