Merry Christmas 2023: கிறிஸ்துமஸ் 2023: வரலாறு, முக்கியத்துவம் தெரிஞ்சிகோங்க..!

Christmas 2023: கிறிஸ்துமஸ் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று வருகிறது. அதன்படி கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடப்படுகிறது, இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 25, 2023, 09:20 AM IST
  • இந்த கிறிஸ்துமஸ் பண்கையானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
  • கிறிஸ்மஸ் பண்டிகை ஒரு சிறப்பு மகிழ்ச்சியைத் தரும் ஒரு பாண்டிகையாகும்.
  • இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

Trending Photos

Merry Christmas 2023: கிறிஸ்துமஸ் 2023: வரலாறு, முக்கியத்துவம் தெரிஞ்சிகோங்க..! title=

கிறிஸ்துமஸ் பண்டிகை 2023: கிறிஸ்துமஸ் பண்டிகை ஒரு சிறப்பு மகிழ்ச்சியைத் தரும் ஒரு பாண்டிகையாகும். சாண்டா கிளாஸ், ஜிங்கிள் பெல்ஸ், கிறிஸ்துமஸ் கரோல்கள், பண்டிகை அலங்காரங்கள், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரிகள், குடும்ப இரவு உணவு மற்றும் பிரார்த்தனைகள் ஆகியவை இந்த சிறப்பான பாண்டிகையில் அடங்கும். இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒரு கிறிஸ்துமஸ் (Christmas 2023) மரத்தை வாங்கி அழகிய வண்ணமயமான அலங்காரங்களால் அலங்கரிக்கின்றனர், அவை அதன் கிளைகளுடன் கட்டப்படுகின்றன. 

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் விதமாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவத்தில் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும், மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்கும் நாள் இதுவாகும். கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம் இரவு அதாவது டிசம்பர் 24 அன்று, மக்கள் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகளில் கலந்து கொள்கிறார்கள். இது தவிர, பரிசுகளை பரிமாறி இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

கிறிஸ்துமஸ் வரலாறு:
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | கிறிஸ்துமஸூக்காக கோவையில் தயாராகும் பிரம்மாண்ட கேக் 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர். எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட் என்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு "கிறிஸ்துமஸ் தீவு" என்று பெயரிடப்பட்டது. இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது.

கிறிஸ்துமஸ் மரம்:
கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கும் பாரம்பரியம் முதலில் ஜெர்மனியில் தோன்றி படிப்படியாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. கிறிஸ்துமஸ் மரம் ஜெர்மனியில் தோன்றியபோது, பிரிட்டனின் ராணி விக்டோரியா மற்றும் இளவரசர் ஆல்பர்ட் ஆகியோர் 1840 கள் மற்றும் 1850 களில் இதை பிரபலப்படுத்தினர். விக்டோரியாவின் தாயார், Saxe-Coburg-Saalfeld இன் இளவரசி விக்டோரியா ஜெர்மன், எனவே அவர் கிறிஸ்துமஸ் நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட மரத்தை வளர்த்து வளர்ந்தார். அரச குடும்பம் விண்ட்சர் கோட்டையில் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தது, இது 1848 இல் இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ் வெளியிட்டது. விரைவில், ஒவ்வொரு பிரிட்டிஷ் வீட்டிலும் திருவிழாவில் தங்கள் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் இருந்தது. மரம் பாரம்பரியமாக வண்ண காகிதம், ஆப்பிள், செதில்கள், டின்ஸல் மற்றும் ஸ்வீட்மீட் ஆகியவற்றால் செய்யப்பட்ட ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டது. மொராவியன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் மரங்களை மெழுகுவர்த்திகளால் ஒளிரச் செய்யத் தொடங்கினர், அவை இறுதியில் மின்மயமாக்கலின் பின்னர் கிறிஸ்துமஸ் விளக்குகளால் மாற்றப்பட்டன.

இன்று, மாலைகள், பாபில்ஸ், டின்ஸல் மற்றும் சாக்லேட் கரும்புகள் போன்ற பல்வேறு வகையான பாரம்பரிய மற்றும் நவீன ஆபரணங்கள் உள்ளன. நேட்டிவிட்டியிலிருந்து முறையே ஏஞ்சல் கேப்ரியல் அல்லது பெத்லஹேமின் நட்சத்திரத்தை குறிக்க மரத்தின் உச்சியில் ஒரு தேவதை அல்லது நட்சத்திரம் வைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனினும் பல ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்துமஸ் மரம் மந்திரவாதிகள், பேய்கள் மற்றும் தீய சக்திகளை தங்கள் வீட்டிலிருந்து விடுவிக்கும் என்று நம்பப்படுகிறது. பல நாடுகளின் மக்கள் கிறிஸ்துமஸ் மரம் நோயைத் தவிர்த்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்.

உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா.?
கிறிஸ்துமஸின் போது குழந்தைகள் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நபர் சாண்டா கிளாஸ் தான். கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் தான் மிகவும் அபிமான மற்றும் முக்கிய நபராக கருதப்படுவார். 8 கலைமான்களை கொண்ட வண்டியில் திறந்த பனியில் சறுக்கி ஓடும் வாகனத்தில் இவர் சவாரி செய்வார் என்பன போன்ற பல தகவல்களை சாண்டா பற்றி கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக சாண்டா கிளாஸ் என்று அன்புடன் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் நாளன்று நமக்கு பரிசுகளை கொண்டு வருவார் என்கிற நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம்.

புராணக்கதைகளின்படி, கிறிஸ்துமஸ் தாத்தா ஆண்டு முழுவதும் குழந்தைகளுக்கான பொம்மைகளை உருவாக்கும் ஒரு ஜாலியான நபராக கருதப்படுகிறார். முதலில் இவர் குழந்தைகளிடமிருந்து அவர்களுக்கு பிடித்த பரிசுகளைக் கோரி கடிதங்களைப் பெறுவார் என்று கூறப்படுகிறது. இவர் வட துருவத்தில் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா கதை துருக்கியில் கி.பி 280-இல் தொடங்குகிறது. செயிண்ட் நிக்கோலஸ் என்ற துறவி ஏழைகளுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் உதவுவதற்காக பல நன்மைகளை செய்வார் என்று தெரிகிறது. இந்த துறவி தனது முழு செல்வத்தையும் ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தி உள்ளார். பின்னாளில் இந்த துறவி குழந்தைகள் மற்றும் மாலுமிகளின் பாதுகாவலராக மாறினார் என்று சில புராணங்கள் கூறுகிறது.

மற்றொரு கதை, நெதர்லாந்தில் இருந்து மக்கள் புதிய உலக காலனிகளுக்கு குடிபெயர்ந்தபோது, ​​அங்கு சாண்டா கிளாஸ் பிறந்ததாக கூறுகின்றனர். இந்த கதையில், செயிண்ட் நிக்கோலஸ் டச்சு பகுதியை சேர்ந்தவராக கூறுகின்றனர். இவற்றின் நல்ல மனப்பான்மை கொண்ட மனதால் பலருக்கும் உதவி வந்துள்ளார். இந்த கதைகள் 1700-களில் அமெரிக்காவில் பல இடங்களில் பரவின. இறுதியில் இவர் இறந்த பிறகு, இவருக்கு சாண்டா கிளாஸ் என பெயர் வைக்கப்பட்டது. எது எப்படியோ, கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் இல்லாதவர்களுக்கு உதவ கூடிய ஒரு நல்ல மனம்கொண்ட மனிதராக உள்ளார் என்பதை நாமும் கிறிஸ்துமஸ் அன்று ஏழை எளியவர்களுக்கு உதவி இந்த 2023 கிறிஸ்துமஸை இனிமையாக கொண்டாடலாம்.

மேலும் படிக்க | Christmas 2023: கிறிஸ்துமஸ் தினத்தன்று குழந்தைகளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News