ஹிராசார் விமான நிலையம் ஒப்பந்தத்தை கைப்பற்றியது ரிலையன்ஸ்!

குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியது ரிலையன்ஸ் நிறுவனம்!

Last Updated : Mar 5, 2019, 06:07 PM IST
ஹிராசார் விமான நிலையம் ஒப்பந்தத்தை கைப்பற்றியது ரிலையன்ஸ்! title=

குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியது ரிலையன்ஸ் நிறுவனம்!

குஜராத் மாநிலம் ஹிராசார் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.648 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. புதிதாக அமையவுள்ள இந்த விமான நிலையம் 8B- தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விமான போக்குவரத்து தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதில் பிரதமர் அறிமுகப்படுத்திய, இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யக்கூடிய விமான சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் சுமார் 400 விமான நிலையங்கள் உள்ளன. அதில் 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் விமான சேவை செயல்பாட்டில் இல்லை. 100 விமான நிலையங்களுக்காவது விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 

சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்கியபோது முக்கிய தனியார் விமான நிறுவனங்கள் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தற்போது விமான சேவையின் விதிமுறைகளை தளர்த்தி இருப்பதால் பல முன்னணி விமான நிறுவனங்கள் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஹிராசார் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை  ரிலையன்ஸ் நிறுவனம்  பெற்றுள்ளது.  வடிவமைப்பு, ரன்வே அமைப்பது, அடிப்படை வசதிகள், கார்கள் நிறுத்துமிடம், சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு  பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

Trending News