அதிர்ச்சியில் பெற்றோர்: நோட்டு புத்தகம் உட்பட ஸ்டேஷனரி பொருட்களின் விலையில் 50% வரை உயர்வு

Price Rise: தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால், பள்ளி குழந்தைகளின் நோட்டு புத்தகங்களின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனுடன், தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வுக்கான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. அதன் பிறகு குழந்தைகளின் கல்விக்கான செலவு உயர்ந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 15, 2022, 10:36 AM IST
  • அதிகரிக்கிறது பணவீக்கத்தின் தாக்கம்.
  • பேப்பர் விலை கிலோவுக்கு ரூ.50ல் இருந்து ரூ.85 ஆக அதிகரித்துள்ளது.
  • பள்ளி குழந்தைகளின் நோட்டு புத்தகங்களின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதிர்ச்சியில் பெற்றோர்: நோட்டு புத்தகம் உட்பட ஸ்டேஷனரி பொருட்களின் விலையில் 50% வரை உயர்வு title=

ஸ்டேஷனரி பொருட்களின் விலை உயர்வு: நாடு முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் தாக்கம், பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வியை இப்போது பாதிக்கத் தொடங்கியுள்ளது. பெட்ரோல்-டீசல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது நோட்டு புத்தகங்களின் விலை 35 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது தவிர, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிக தேவை இருப்பதால், சந்தையில் புத்தகங்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

50 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது

புதிய கல்வியாண்டு ஏப்ரல் முதல் தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வுக்கான தடையை அரசு நீக்கியுள்ளது. மறுபுறம், இப்போது புத்தகங்கள் மற்றும் ஆடை, காலணிகள் போன்றவற்றின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்றோரின் பிரச்னை அதிகமாகிக்கொண்டே போகிறது. இதுதவிர பள்ளிப் பைகள் விலை ரூ.100 அதிகரித்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. காலணிகளுக்கான ஜிஎஸ்டி வரி 5ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து, பள்ளி காலணிகளின் விலை ரூ.150 வரை உயர்ந்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்ந்தது

கொரோனா காலத்தில் நோட்டு புத்தகங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலை கிலோ ரூ.80ல் இருந்து ரூ.160-170 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | UPI Payment Mistakes:இதை செய்யத் தவறினால் உங்கள் கணக்கு காலியாகிவிடும் 

பேப்பர் விலை கிலோவுக்கு ரூ.50ல் இருந்து ரூ.85 ஆக அதிகரித்துள்ளது. முன்பு சராசரியாக மூவாயிரம் ரூபாய்க்கு வந்த நோட்டு புத்தக தொகுப்பு, இம்முறை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல தனியார் பதிப்பகங்களில் ரூ.300 முதல் ரூ.325 வரை விலை இருந்த கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய புத்தகங்கள் தற்போது ரூ.400 ஆக உயர்ந்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நோட்டு புத்தகங்களுக்கான தேவை அதிகரித்தது

கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2020 ஆம் ஆண்டில் லாக்டவுன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. 2021 ஆம் ஆண்டிலும், பள்ளிகளை சரியான நேரத்தில் திறக்க முடியாததால் புத்தகம் மற்றும் எழுதுபொருள் வணிகம் பாதிக்கப்பட்டது. காலதாமதமாக பள்ளி திறக்கப்பட்டதால் வியாபாரம் எதுவும் சரியாக செய்ய முடியவில்லை. 

குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் மட்டுமே புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்கினார்கள்.

இதன் காரணமாக புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களின் இருப்பு சேமிக்கப்பட்டது. ஆனால் 2022 ஆம் ஆண்டில், அரசாங்கம் கொரோனாவின் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. இதற்குப் பிறகு நோட்டு புத்தகங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்தது. ஆனால், அவற்றில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு பெற்றோரின் கவலையை அதிகரித்துள்ளன.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி, நிதி அமைச்சகம் அளித்த தகவல் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News