டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே மாரிமுத்துக்கு மாரடைப்பு: எதிர்நீச்சல் திருச்செல்வம்

Actor G Marimuthu Passes Away: டப்பிங் பேசிவிட்டு வருவதாக தெரிவித்திருந்த நிலையில் நடிகர் மாரிமுத்து மரணம் குறித்து எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 8, 2023, 11:50 AM IST
  • டப்பிங் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டது.
  • சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் அவர் நடித்திருந்தார்.
  • இவரது நடிப்பு எதிர்நீச்சல் சீரியலை எங்கோ கொண்டு சேர்த்தது.
டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே மாரிமுத்துக்கு மாரடைப்பு: எதிர்நீச்சல் திருச்செல்வம் title=

நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்: சின்னத்திரை நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றார். இவர் இந்த சீரியலில் நடிக்கும் விதம், உடல் மொழி, முக பாவனை உள்ளிட்டவைகளால் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். இவரது நடிப்பு எதிர்நீச்சல் சீரியலை எங்கோ கொண்டு சேர்த்தது. 

இந்த நிலையில் அவர் இன்று காலை 8:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் வந்தன. இதுகுறித்து இயக்குநர் திருச்செல்வம் கூறுகையில் நடிகர் மாரிமுத்து இறந்தது எல்லாருக்கும் மிகப் பெரிய இழப்பு. நாங்கள் இன்று ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தோம். அவருக்கு இன்று சூட்டிங் இல்லை என்பதால் டப்பிங் பேசிவிட்டு அங்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் அதற்குள் அவருக்கு இப்படி ஆனது நம்பவே முடியவில்லை. இது எங்களுக்கு மட்டுமல்ல திரையுலகிற்கே ஒட்டுமொத்த பெரிய இழப்பாகும்.

அதுமட்டுமில்லை, அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் எல்லாரும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள். இவ்வாறு திருச்செல்வம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | மாரிமுத்து மறைவு: 'சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணம்...' - வைரமுத்து உருக்கம்

2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான மாரிமுத்து, சுமார் 6 வருடங்கள் கழித்து 2014இல் விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார். அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். இயக்குநராக செயல்பட்டு வந்த மாரிமுத்து, 2010ஆம் ஆண்டில் இருந்து நடிப்பிலும் கவனம் செலுத்தினார். அதற்கு முன்பே, வாலி, உதயா போன்ற படங்களில் தோன்றியிருந்தாலும் 2011ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். 

அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில், ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவரது மறைவுக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஹரிபிரியா, கதிர் கேரக்டரில் நடித்த நடிகர், கரிகாலன் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி தெலுத்தி வருகிறார்கள். அவரது உடல் வந்ததும் அவருடைய மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது. அவரது உடலை ஐஸ் பெட்டியில் வைத்த போது சிவப்பு , சாம்பல் நிற டீசர்ட், கருப்பு நிற பேன்ட் அணிந்திருக்கிறார். ஏதோ படுத்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. அவர் இறந்தது போல் தெரியவில்லை என ரசிகர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள். இந்த காட்சி எதிர்நீச்சலில் ஒரு சீனாக இருக்கக் கூடாதா என கேட்கிறார்கள்.

மேலும் படிக்க | 'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரனின் புது அவதாரம்..! ரஜினி டைலாக் பேசி மாஸ் காட்டிய மாரிமுத்து..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News