மகன் கேட்ட ஒரே கேள்வி... ஆடிப்போன விஜய்..! அப்படி என்ன கேட்டார்?

சன்பிக்சர்ஸ் என்பதால் பிரமோஷனுக்கு பஞ்சமில்லை. ஆடியோ வெளியீட்டு விழா வைத்து எந்த சர்ச்சையிலும் சிக்காமல் அழகாக நேருக்கு நேர் என்று ஒரு நேர்காணலை வைத்து வேற லெவலில் பிரமோஷன் செய்துவிட்டனர். 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Apr 11, 2022, 04:30 PM IST
  • நெல்சன் நடிகர் விஜய்யை நேர்காணல் செய்தார்
  • பீஸ்ட் படத்துக்கான பிரமோஷனாக அது அமைந்தது
  • அதிக திரையரங்களில் பீஸ்ட் வெளியாகிறது
மகன் கேட்ட ஒரே கேள்வி... ஆடிப்போன விஜய்..! அப்படி என்ன கேட்டார்? title=

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இந்த படத்துக்கு ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படாத நிலையில், படக்குழு சார்பில் நேர்காணல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேருக்கு நேர் என்ற பெயரில் வெளியான அந்த நேர்காணலில் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யிடம் கேள்விகள் கேட்டு தெறிக்கவிட்டார். தொடர்ந்து ஒரு மணி நேரம் வெளியான இந்த பேட்டியில் விஜய் பல முக்கிய விஷயங்கள் குறித்து மனம் திறந்தார்.

vijay

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகிறது. அதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல். அதேபோல இதுவரை வெளியான விஜய் படங்களில் இந்த படம் தான் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூரிலும் அதிக திரையரங்குகளில் வெளியாவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

vijay

மேலும் படிக்க | அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?- விஜய் சொன்ன பதில் என்ன?

சன்பிக்சர்ஸ் என்பதால் பிரமோஷனுக்கு பஞ்சமில்லை. ஆடியோ வெளியீட்டு விழா வைத்து எந்த சர்ச்சையிலும் சிக்காமல் அழகாக நேருக்கு நேர் என்று ஒரு நேர்காணலை வைத்து வேற லெவலில் பிரமோஷன் செய்துவிட்டனர். அதுவும் கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து விஜய் அளிக்கும் பேட்டி இது என்பதால், அவரது ரசிகர்கள் படு குஷியாகிவிட்டனர். பலரும் ட்விட்டரில் விஜய் பேசியது குறித்து பதிவிட்டு அவற்றை ட்ரெண்ட் செய்தனர். 

பீஸ்ட் படத்துக்கான பிரமோஷனாக அமைந்த இந்த நிகழ்ச்சியில் தனது மகன் குறித்து விஜய் பேசியது கவனம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது விஜய் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்றார். அது மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. விஜய்யை பின் தொடர்ந்து அவரது ரசிகர்களை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் விஜய் வாக்களித்து விட்டு வீடு சென்றார். அப்போது பலரும் விஜய்க்கு போன் செய்து பத்திரமாக வீடு திரும்பினாரா என்று விசாரித்துள்ளனர். அதுபோல விஜய்யின் மகன் சஞ்சய் போன் செய்துள்ளார். ஆனால் அவர் கேட்ட கேள்வி விஜய்யை ஷாக் ஆக்கியுள்ளது. 

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ திரை விமர்சனம்: தீயாகப் பரவும் வைரல் போஸ்ட்!

விஜய்க்கு போன் செய்த அவரது மகன் என்னுடைய சைக்கிள் பத்திரமாக இருக்கா என்று கேட்டுள்ளார். விஜய் அப்போது ஓட்டிச்சென்ற சைக்கிள் அவரது மகனுடையது. கனடா நாட்டில் படித்து வரும் மகனின் சைக்கிளை தான் விஜய் ஓட்டியுள்ளார். இந்த சுவாரஸ்ய நிகழ்வை நெல்சனுடன் விஜய் பகிர்ந்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News