நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் மரணம்! இறப்புக்குக் காரணம் போதை மருந்தா?

Multi Talent Celebrity Aditya Singh Rajput Dead: பல நடிகர்களுடன் பணியாற்றியுள்ள பன்முகத் திறமை கொண்ட நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத்தின் மரணம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2023, 05:36 PM IST
  • பன்முகத் திறமை கொண்ட பாலிவுட் இளம் நடிகர் மரணம்
  • குறுகிய காலத்தில் பிரபலமான இளைஞர்
  • மாடல், நடிகர், இயக்குநர், தொலைகாட்சி பிரபலம் ஆதித்ய சிங் ராஜ்புத்
நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் மரணம்! இறப்புக்குக் காரணம் போதை மருந்தா? title=

நடிகரும், மாடலும், காஸ்டிங் ஒருங்கிணைப்பாளருமான ஆதித்யா சிங் ராஜ்புத், மே 22 அன்று பிற்பகல் அவரது அந்தேரி வீட்டின் கழிவறையில் இறந்து கிடந்தார். அவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தனது தொழில் வாழ்க்கையை ஒரு மாடலாக தொடங்கிய ஆதித்யா சிங் ராஜ்புத், பிறகு நடிகராக அவதாரம் எடுத்தார். திரையுலகில் அவர் தனது பன்முகத் திறமையை வெளிக்காட்டினார்.. திரைப்படத் துறையுடன் நன்கு இணைந்திருந்த அவர், பல நடிகர்களுடன் பல பிராண்டுகளுக்காகப் பணியாற்றியுள்ளார். அவரது மரணம் தொழில்துறைக்கு பெரும் அதிர்ச்சியாக கருதப்படுகிறது.

நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத்

டெல்லியை சேர்ந்த ஆதித்யா, ‘கிராந்திவீர்’ மற்றும் ’மைனே காந்தி கோ நஹி மாரா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சுமார் 300 விளம்பரங்களில் நடித்துள்ள ஆதித்யா, Splitsvilla 9 போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். இது தவிர, ஆதித்யா லவ், ஆஷிகி, கோட் ரெட், ஆவாஸ் சீசன் 9, பேட் பாய் சீசன் 4 மற்றும் பிற டிவி நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார்.  

மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்

சமீபத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் தொடர்களை வைத்துக் கொண்ட ஆதித்யா, மும்பை கவர்ச்சி வட்டாரத்தில் பிரபலமாக இருந்தார். பார்ட்டிகளுக்கான நட்சத்திரமானார். ஆதித்யா சிங் ராஜ்புத் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைச் செய்த பிறகு தனது பிராண்ட் பாப் கலாச்சாரத்தைத் தொடங்கினார்.

இயக்குநராக பணியாற்றிய ஆதித்யா, பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை அறிமுகப்படுத்தினார்.

நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத்

17 வயதில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஆதித்யா, டெல்லியில் பிறந்து வளர்ந்தார். ஆதித்யா சிங் ராஜ்புத்தின் குடும்பம் உத்தரகாண்டில் இருந்து வந்தவர்கள். பெற்றோருடன் ஆதித்யாவுக்கு ஒரு மூத்த சகோதரியும் இருக்கிறார்.

மேலும் படிக்க | பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா நடிகை க்ரித்தி ஷெட்டி?

நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத், போதை மருந்து குடித்ததால் குளியலறையில் இறந்து கிடந்தார் என தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிபடுத்தின. அவர் தனது வீட்டில் உள்ள குளியறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற செய்தி பாலிவுட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவரது மரணம் போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை அடுக்குமாடி குடியிருப்பின் கழிவறையில் இறந்து கிடந்த அவர், அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் இருந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

மேலும் படிக்க | காவடியுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஷண்முகம் - அண்ணா சீரியல் முதல் எபிசோட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News