காவடியுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஷண்முகம் - அண்ணா சீரியல் முதல் எபிசோட் அப்டேட்!

Anna Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை அண்ணா என்கிற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 22, 2023, 10:09 AM IST
  • ஜீ தொலைக்காட்சியில் புதிய சீரியல்.
  • இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது.
  • தினமும் இரவு 8.30க்கு ஒளிபரப்பாகிறது.
காவடியுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஷண்முகம் - அண்ணா சீரியல் முதல் எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் அண்ணா. இந்த சீரியலில் முதல் நாள் எபிசோட் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  திருச்செந்தூரை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாக உள்ள கதைக்களம் என்பதால் திருச்செந்தூருடன் சீரியல் காட்சி ஓபனாக ஒரு வீட்டில் சண்முகத்தின் தங்கைகளான இசக்கியம்மாள், ரத்னா, மீரா, செல்லக்கனி என நான்கு தங்கைகளின் இண்ட்ரோவுடன் சீரியல் தொடங்குகிறது. ஊரில் திருவிழா என்பதால் சண்முகம் காவடி எடுக்க உள்ள காரணத்தினால் எல்லோரும் அண்ணா உடன் சேர்ந்து விரதம் இருக்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர். பிறகு அண்ணா ஸ்ரிக்ட் என்பதால் எல்லோரிடமும் சாதாரண மொபைல் போன் மட்டுமே இருக்கிறது. அண்ணனுக்கு தெரியாமல் வீட்டில் மறைத்து வைத்திருக்கும் ஒரு ஸ்மார்ட்போனை எடுத்து தங்கைகள் அனைவரும் செல்பி எடுத்து கொள்கின்றனர். 

மேலும் படிக்க |  வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்

anna

அதற்கு அடுத்ததாக கோவில் திருவிழாவில் ஊரில் பெரிய தலை கட்டான சௌந்தரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி பாக்கியம் இருவரும் வந்து இறங்குகின்றனர். அதோடு பக்கத்து ஊர் பெரிய தலை கட்டான பூச்சிக்காடு கண்ணன் என்பவர் தன்னுடைய ஆட்களுடன் பிரச்சனை செய்வதற்காகவே திருவிழாவிற்கு வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் சண்முகம் தான் காவடி எடுத்து கோவில் திருவிழாவை தொடங்கி வைப்பார் என்று இருக்கும் நிலையில் பூச்சிக்காடு கண்ணன் இந்த முறை எங்க ஆள் தான் காவடி எடுப்பான் என சண்டையிட்டு காவடி எடுக்க சொல்ல அவனால் காவடியை தூக்க முடியாமல் போகிறது. 

அதன் பிறகு சண்முகம் வந்து முருகன் அருளோடு காவடியை தூக்கி சாமியாடிக் கொண்டே கோவிலை நோக்கி நகர ரவுடிகள் உன் தங்கச்சிங்களுக்கு முத்தம் கொடுக்கப் போறோம் என கலாட்டா செய்ய சாமியாடி கொண்டிருக்கும் சண்முகம் காவடியை தூக்கிக்கொண்டே அவர்களை அடி வெளுத்து வாங்குகிறார்.  அதன் பிறகு ஒரு வழியாக திருவிழா நல்லபடியாக முடிய மறுநாள் காலையில் சண்முகம் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க செல்லக்கனி அவரை எழுப்ப போக ரத்னா அண்ணா நிம்மதியா தூங்குறது என்னைக்கோ ஒரு நாள் தான் அவர் நல்லா தூங்கட்டும் எழுப்ப வேண்டாம் என தடுத்து விடுகிறாள்.  கொஞ்ச நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் சண்முகம் இவ்வளவு நேரம் எப்படி தூங்கினேன் ஏன் எழுப்பல என கேள்வி கேட்க நீ என்னைக்காவது ஒரு நாள் தான் நல்லா தூங்குற அதனால தான் எழுப்பல என தங்கைகள் சொல்ல இப்படி தூங்கிட்டு இருந்தா பிசினஸ் என்ன ஆகிறது என எழுந்து வேக வேகமாக கடைக்கு செல்ல கிளம்புகிறார். 
 
இதற்கிடையில் தங்கைகள் நேற்று நடந்த பிரச்சனைகள் எதுவும் அண்ணனுக்கு தெரிய வேண்டாம் என முடிவெடுக்க சண்முகத்துக்கு தங்கைகள் ஏதோ மறைக்கிறார்கள் என்ற விஷயம் தெரிய வருகிறது. செல்லக்கனி எப்போதும் உண்மையை மட்டும் தான் பேசுவாள் என்பதால் அவளிடம் இருந்து விசயத்தை கறந்து விடலாம் என சண்முகம் முயற்சி செய்ய அவள் ரவுடிகள் அராஜகம் செய்த விஷயத்தை சொல்கிறாள். உடனே செந்தில் வெட்டுக்கிளி என்பவரை அழைத்துக் கொண்டு ரவுடிகளை பார்க்க கோபமாக கிளம்ப தங்கைகள் தடுக்க முயற்சி செய்தும் சண்முகம் கிளம்பி செல்கிறார். ரவுடிகள் அடி கொடுத்த சண்முகத்தை பழி தீர்க்க திட்டம் போட்டுக் கொண்டிருக்க அங்கே சண்முகம் வந்து நிற்கிறார். 

யார்ரா என் தங்கச்சியை கிண்டல் அடித்தது என கேட்க ரவுடிகள் பயந்து நடுங்குகின்றனர். பிறகு செந்தில் அவர்களை அடி வெளுத்து வாங்குவார் என பார்த்தால் பக்கம் பக்கமாக அண்ணன் தங்கை பாசம் பற்றி பேசி ரவுடிகளை அதிர வைக்கிறார். ரவுடிகளே கட்டை எடுத்து நீ எங்களை அடித்து கூட போ ஆனா இப்படி பேசி அறுக்காத என கதறுகின்றனர்.  இனிமே உன் தங்கச்சி மட்டும் இல்ல ஊர்ல இருக்க எந்த பொண்ணையும் சைட் அடிக்க மாட்டோம் என தெறித்து ஓடுகின்றனர். பிறகு சண்முகம் எப்படி ஓட விட்டான் பாத்தியா என மீசையை முறுக்கிக் கொண்டே கம்பீரமாக வீட்டுக்கு திரும்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News