சிதம்பரத்துக்கு கிட்னி கொடுக்க முடிவெடுத்த செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

Amudhavum Annalakshmiyum: சிதம்பரத்துக்கு கிட்னி கொடுக்க முடிவெடுத்த செந்தில்.. அவமானப்பட்டு நிற்கும் அன்னம் - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - RK Spark | Last Updated : Jun 10, 2023, 11:53 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும்.
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
சிதம்பரத்துக்கு கிட்னி கொடுக்க முடிவெடுத்த செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.  ஊர்காரர்கள் வந்து அன்னம் வடிவேல், மாணிக்கத்தை சிதம்பரத்தை அவமானப்படுத்தி அவர் உயிர் போகும் அளவுக்கு செய்ததால் இரண்டு ஊருக்கும் பிரச்சனை வந்துவிடும் என சொல்லி அவர்களை பஞ்சாயத்துக்கு அழைத்து செல்கிறார்கள்.  இந்த நிலையில் இன்றைய எபிசோடில் டாக்டர் சிதம்பரத்திற்கு கிட்னி மாற்ற வேண்டும் என சொல்கிறார், மேலும் உடனே கிடைக்க வேண்டும் என்றால் குடும்பத்தினர் தான தர வேண்டும் என சொல்ல அனைவரும் செக் பண்ண நாகு மட்டும் நழுவி விடுவது. செந்தில் தானும் டெஸ்ட் தருவதாக சொல்கிறான். 

மேலும் படிக்க | தமன்னாவிற்கு ஜெயிலர் ஷூட்டிங்கில் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...என்ன தெரியுமா?

மறுபக்கம் சிதம்பரத்தை தன் காலில் விழ வைத்ததுக்கு ஊர்காரர்கள் வடிவேல் மேல் கோபப்பட்டு அவனை அடிக்கிறார்கள். அன்னத்தை ஊர் மத்தியில் உட்கார வைக்க அன்னத்துக்கு அது அவமானமாக இருக்கிறது. டெஸ்ட் ரிசல்ட் படி செந்திலின் கிட்னி தான் பொருந்தும் என டாக்டர்கள் முடிவு சொல்ல செந்தில் கிட்னி கொடுக்க சம்மதிக்கிறான். இந்த விஷயம் அறியும் சிதம்பரம் வேண்டாம் என மறுக்க செந்தில் அவரிடம் பேசி சம்மதிக்க வைக்கிறான். 

amutha

செந்தில் தன் கிட்னியை சிதம்பரத்துக்கு கொடுக்க சம்மதித்து இருப்பதை நினைத்து இளங்கோ மனம் நெகிழ்ந்து கோபத்தை மறந்து செந்திலுடன் பேச, அமுதாவும் செந்தில் மேல் அதித உணர்வுடம் நெகிழ்ச்சியாகிறாள். சீஃப் டாக்டர் ஒருவர் வந்து சிதம்பரம் பிழைத்து விட்டார் அவருக்கு கிட்னி மாற்றி அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை என சொல்கிறார். அதை கேட்ட அமுதா செந்திலை கண்ணீருடன் அணைத்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கடுப்பான லோகேஷ் கனகராஜ்! சமாதானம் செய்வாரா விஜய்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News