இதயம்: கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் பாரதி.. எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த ஆதி

Idhayam Today's Episode Update: நேற்றைய எபிசோடில் பாரதி ஸ்டேஷனில் இருக்க ஆதி உண்மையை நிரூபிக்க ஒரு மணி நேரம் டைம் கேட்டு கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 18, 2024, 12:04 PM IST
  • கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் பாரதி.
  • எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த ஆதி.
  • இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
இதயம்: கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் பாரதி.. எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த ஆதி title=

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி ஸ்டேஷனில் இருக்க ஆதி உண்மையை நிரூபிக்க ஒரு மணி நேரம் டைம் கேட்டு கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஒரு மணி நேரம் ஆகியும் ஆதி வராத நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதியை கோர்ட்டில் ஒப்படைக்க சொல்கிறார். பிறகு பாரதியை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று போலீஸ் கிளம்ப ஸ்வேதா இங்கு வந்து என்னாச்சு என்று கேட்கிறாள்.  இன்ஸ்பெக்டர் கோர்ட்டுக்கு அனுப்பியாச்சு என்று சொல்கிறார்.

மேலும் படிக்க | 2024ல் வெளிவர இருக்கும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள்

இந்த நேரத்தில் ஏ.சி இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டு அந்த பாரதி கேஸ் என்ன ஆச்சு? அந்த பொண்ணு எந்த தப்பும் பண்ணல.. உடனே ரிலீஸ் பண்ணு என்று சொல்கிறார். இதனால் இன்ஸ்பெக்டர் ஓகே சார் என்று பதறுகிறார். 

பிறகு பாரதியை அழைத்துக் கொண்டு செல்லும் போலீஸ் வேற எங்கோ ஒரு இடத்திற்கு செல்ல பாரதி எங்க போறீங்க கோர்ட்டுக்கு போற மாதிரி தெரியலையே என்று கேள்வி கேட்க அவர்கள் துப்பாக்கியை காட்டி பாரதியை அமைதியாக வர சொல்லி மிரட்டுகின்றனர். 

பிறகு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கே அய்யா இருக்காரு போய் பேசு என்று இறக்கிவிட போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ஒருவரிடம் பாரதி சார் யார் நீங்க என்ன வேணும்? என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேள்வி கேட்க அந்த போலீஸ் திரும்ப அது ஆதி என தெரியவந்து பாரதி அவனை கட்டியணைத்துக் கொள்கிறாள். 

பிறகு இருவரும் வீட்டுக்கு வர சாரதா பணத்தை திருடுனவளை எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்த என்று கண்டபடி பேச ஆதி எதையும் கண்டு கொள்ளாமல் தமிழை கூப்பிட்டு உட்கார வைத்து சாப்பாடு பரிமாற சொல்ல பாரதி இருவருக்கும் சாப்பாடு பரிமாறுகிறாள். நான் பேசிட்டே இருக்கேன் நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என்று சாரதா கோவப்பட ஆதி என்ன நடந்துச்சுன்னு எனக்கு நல்லாவே தெரியும் நான் எதையும் பேச விரும்பல என்று சொல்கிறான். 

பாரதி கொஞ்சம் நான் பேசிக்கலாமா என்று தங்களது காதல் கதையை சொல்லி ஆதிக்கு இருக்கும் பிரச்சனைகள் பற்றி எனக்கு தெரியும் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். அறிவு என்ன உன் பொண்டாட்டி என்னென்னமோ பேசுற என்று சத்தம் போட ஆதி நான் எதுவும் பேச விரும்பல என்று சொல்கிறான். 

பிறகு ஒருத்தன் எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு யாரையும் கண்டு கொள்ளாமல் மேலே செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மகள் திருமணத்திற்கு அர்ஜுன் கொடுத்த வரதட்சனை! ஆத்தாடி..இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News