பொன்னியின் செல்வன்: 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல்

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அமோக வெற்றி பெற்றது. இப்படம் மூன்றே நாட்களில் ரூ.230 கோடியை தாண்டியது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 3, 2022, 10:52 AM IST
  • பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  • உலகளவில் ரூ.230 கோடி வசூல்
  • இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்: 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் title=

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே திரைவடிவம் பெற்ற இந்தப் படம், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது, ஆங்காங்கே சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், கல்கியின் நாவலை படமாக கொண்டு வந்ததில் வெற்றியை நாட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். ஆயிரக்கணக்கானோர் வாசித்து, தங்களின் கற்பனை சிறகுகளில் உருவாக்கி வைத்திருந்த வந்தியதேவன், குந்தவை, நந்தினி, பழுவேட்டரையர்களுக்கு இப்போது உருவம் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். இதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

புனைவு கதை என்றாலும், சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை தாங்கி வந்திருக்கும் படம் என்பதால் இயல்பாகவே தமிழ் ரசிகர்களின் ஆவலுக்குரிய படமாக மாறியிருக்கிறது பொன்னியின் செல்வன். வந்தியதேவன், ஆதித்ய கரிகாலன் முதல் நந்தினி, குந்தவையாக கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் வாழ்ந்திருக்கின்றனர். இதுவே படத்தின் பாதி வெற்றிக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.

மேலும் படிக்க | ‘சோழர்களே உங்களுக்கு அவ்வளவுதான்' - எச்சரிக்கை விடுத்த பாண்டியர்கள்... மதுரையில் கலகலப்பு

மேலும் படிக்க | ‘சோழர்களே உங்களுக்கு அவ்வளவுதான்' - எச்சரிக்கை விடுத்த பாண்டியர்கள்... மதுரையில் கலகலப்பு

நேற்று முன்தினம் வெளியான இந்தப் படம் முதல் நாளே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியிந்தது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. பார்த்திபன் ஏற்கனவே மணிரத்னத்திடம் இருந்து பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றுவிட்டார். தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தமிழ் குமரன் ஆகியோர் இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். 

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பாகம் 1 பாக்ஸ் ஆபிஸை சுடுகாடாக்கி வருகிறது. மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ 230 கோடியை தாண்டிய இப்படம் இன்று அக்டோபர் 3 ஆம் தேதி ரூ 250 கோடி வசூலை எட்டுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | முதல் நாளே 100 கோடி அருகில் - பொன்னியின் செல்வன் மெகா வசூல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News