எனக்கு ஒரு மகன்தான் மகளே இல்லை - ராஜ்கிரண் ஆவேச விளக்கம்

தற்போது திருமணமாகியிருக்கும் பெண் தன்னுடைய வளர்ப்பு மகள் என நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 9, 2022, 02:41 PM IST
  • ராஜ்கிரண் மகளுக்கு திருமணம்
  • சீரியல் நடிகர் முனீஸ் திருமணம் செய்துகொண்டார்
  • தனக்கு ஒரு மகன்தான் என ராஜ்கிரண் விளக்கம்
எனக்கு ஒரு மகன்தான் மகளே இல்லை - ராஜ்கிரண் ஆவேச விளக்கம் title=

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரும், இயக்குநர் ராஜ்கிரண். இவரது மகள் ஜீனத் ப்ரியாவை சீரியல் நடிகர் முனீஸ் ராஜா திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் விளக்கமளித்து வீடியோவையும் வெளியிட்டனர். மேலும், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததாகவும் அதனை மீறியே இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ராஜ்கிரண் இந்த விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது தனது முகநூல் பக்கத்தில், “என் மகளை ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. எனக்கு திப்பு சுல்தான் நைனார் முகம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை ''வளர்ப்பு மகள்'' என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்த பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

Rajkiran

அந்த நடிகரைப் பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள் என தெரியவந்தது. இதையெல்லாம் என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப் பெண்ணிடம் அழுது மன்றாடி, மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தோம்.

 

இந்த சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான லட்சுமி பார்வதியை பார்த்துவிட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப் பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில்தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. என் வளர்ப்புப்பெண், ஒரு நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன்.

Muneesh

ஆனால், தன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம். இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அவர் கலந்துகொண்ட ஒரே படப்பிடிப்பு அதுதான் - மகாராணி மறைவுக்கு கமல் இரங்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News