சந்தியா ராகம்: தனத்தின் குடிசைக்குள் புகுந்த கார்த்திக்.. திருடன் என்று தேடும் குடும்பம், நடந்தது என்ன?

Sandhya Raagam Serial Today march 12 Episode Update: நேற்றைய எபிசோடில் பார்வதி ஒரு பிளான் போட்டு சீனுவை மாயாவுக்கு பெட்ஷீட் கொடுக்க சொல்லி அனுப்ப அவன் தவறுதலாக மாயா இருக்கும் குடிசைக்குள் நுழைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 12, 2024, 01:16 PM IST
  • இந்த சீரியல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.
  • இதனை Zee5 தளத்திலும் நீங்கள் பார்க்கலாம்.
  • வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிறது.
சந்தியா ராகம்: தனத்தின் குடிசைக்குள் புகுந்த கார்த்திக்.. திருடன் என்று தேடும் குடும்பம், நடந்தது என்ன? title=

Sandhya Raagam Serial Today's Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பார்வதி ஒரு பிளான் போட்டு சீனுவை மாயாவுக்கு பெட்ஷீட் கொடுக்க சொல்லி அனுப்ப அவன் தவறுதலாக மாயா இருக்கும் குடிசைக்குள் நுழைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மாயா சீனுவை பார்த்ததும் அதிர்ச்சியாகி யாரவது பார்த்தா தப்பாகிடும் வெளியே போ என்று கத்த சீனு வெளியே வர பார்வதி திட்டம் பெயிலியரானதால் அதிர்ச்சி அடைகிறாள், ஷாருவும் திரையை விலக்கி பார்க்க சீனு மாயாவுக்கு பெட்ஷீட் கொடுத்துட்டேன் என்று பார்வதியிடம் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இதனால் ஷாரு அம்மாவை திட்டுகிறாள். 

மேலும் படிக்க | பிரேமலு புகழ் மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கும் முதல் தமிழ் படம்!

அடுத்து ஷாருவின் அப்பா கரண்ட் கட் ஆனதால் வெளியில் வந்து நடந்து கொண்டிருக்க கார்த்திக் சுவர் ஏறி குதித்து உள்ளே வர திருடன் திருடன் என சத்தம் போட எல்லாரும் கூடி விடுகின்றனர். ரூம் ரூமாக தனத்தை தேடும் கார்த்திக் மொட்டை மாடியில் இருந்து வராண்டாவில் குதிக்க எல்லாரும் அங்கு வர குடிசைக்குள் ஓடி ஒளிய அது தனத்தின் குடிசை என்று தெரிய வருகிறது. 

அதன் பிறகு தனம் பயந்து கார்த்திக்கை ஒளித்து கொள்ள ஜானகி திருடன் குடிசைக்குள்இருக்கானோ என்று சந்தேகப்பட்டு தனத்தின் குடிசை அருகே வர அவள் இங்க யாரும் இல்லமா, சத்தம் கேட்டு தான் நானே எழுந்து கொண்டேன் என்று சொல்கிறாள். பிறகு மாயா குடிசையில் பார்க்க அங்கும் யாரும் இல்லை. சாருவின் குடிசைக்குள் பார்வதி பார்க்க அவள் அசந்து தூங்கி கொண்டிருக்கிறாள். 

இதனால் திருடன் எங்கும் இல்லை என்று எல்லாரும் உள்ளே செல்ல சீனுவுக்கு மட்டும் சந்தேகமாக இருக்க அவன் அங்கேயே நிற்க கார்த்திக் தனத்தின் குடிசைக்குள் இருந்து வெளியே வர அதை பார்த்து ஷாக் ஆகிறான். மாயாவும் இதை பார்த்து ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Manjummel Boys : ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ ஓடிடியில் ரிலீஸாவது எப்போது? வெளியானது தகவல்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News