சீதா ராமன் அப்டேட்: சீதா விட்ட சவால்.. மகாவுக்கு அதிர்ச்சி, பயத்தில் சுபாஷ்

Seetha Raman Today's Episode Update: சீதா விட்ட சவால்.. மகாவுக்கு அதிர்ச்சி, பயத்தில் சுபாஷ் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 24, 2023, 03:25 PM IST
  • அர்ச்சனா மீராவின் கல்யாண பத்திரிகையை வைத்து சீதாவுடன் .
  • இந்த கல்யாணத்தை நான் பெருசா நடத்தி காட்டுவேன் என்று சவால் விடுகிறாள்.
  • சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
சீதா ராமன் அப்டேட்: சீதா விட்ட சவால்.. மகாவுக்கு அதிர்ச்சி, பயத்தில் சுபாஷ் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். நேற்றைய எபிசோடில் அர்ச்சனா மீராவின் கல்யாண பத்திரிகையை வைத்து சீதாவுடன் சேர்ந்து பூஜை செய்ய மகா அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் துணை நடிகருக்கு கிப்ட் கொடுத்த ரஜினி..! யார் அந்த நடிகர் தெரியுமா..?

அதாவது, சீதா அர்ச்சனாவிடம் இந்த கல்யாணத்தை நிறுத்த நினைச்சா என்னவாகும் என்று கேட்க அர்ச்சனா கை, கால் விளங்காமல் போய்டும் என்று சொல்ல அதை கேட்டு மகா அதிர்ச்சி அடைகிறாள், பிறகு சீதா மகாவிடம் யார் தடுக்க நினைத்தாலும் இந்த கல்யாணத்தை நான் பெருசா நடத்தி காட்டுவேன் என்று சவால் விடுகிறாள். 

பிறகு மகா அர்ச்சனாவை கூட்டி சென்று மகா மகானு என் பக்கம் இருந்துட்டு இப்போ அப்படியே கட்சி மாறிட்டிங்க என்று கோப்பட அர்ச்சனா சுபாஷுக்கு சூனியம் வச்சு ரத்த வாந்தி வர வைப்போம்னு மிரட்டியதாக நடந்த விஷயங்களை சொல்ல மகாவும் சேதுவும் அதிர்ச்சி அடைகிறார்கள், மகா உங்களை நல்லா ஏமாத்திட்டாங்க, அவ சூனியம் வைக்கிறதா இருந்தா முதல்ல எனக்கு தானே வைப்பா என்று சொல்ல அர்ச்சனா ஆமா, என்னை எப்படி ஏமாத்துனாங்க என்று யோசிக்கிறாள். 

அடுத்ததாக சுபாஷையும் இந்த மாதிரி எதாவது சொல்லி தான் பயம் காட்டி இருபாங்க உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க முதலில் சேது தெரியும் என்று சொல்லி விட்டு பிறகு தெரியாது, இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி சமாளிக்கிறார். 

அதனை தொடர்ந்து மீராவும் சீதாவும் பத்திரிகை கொடுக்க தொடங்கி சுபாஷிடம் சீதா தெலுங்குவில் பேசி கலாய்க்க அவன் பயந்து நடுக்குகிறான், இதையெல்லாம் சேதுவும் மகாவும் கவனித்துகொண்டிருக்கின்றனர். ராம் தங்கைகள் அப்பாவை ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என்று கோபப்பட சீதா போய் படிக்கிற வேலையை பாருங்க என்று சொல்ல சுபாஷும் நீங்க போய் படிங்க என்று துரத்தி விடுகிறார். 

அடுத்து சேது இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர என்கிட்ட ஒரு வழி இருக்கு என்று சொல்ல இங்க சீதா சுபாஷிடம் இந்தாங்க பத்திரிகை, இது உங்களுக்கும் சொப்னாவுக்கும் என பேரை சொல்ல வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ் படங்கள்..! முழு லிஸ்ட் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News