குக் வித் கோமாளி பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா வெளியிட்ட முதல் பதிவு! என்ன தெரியுமா?

Priyanka First Post After Cooku With Comali 5 : ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கடந்த சில காலமாக கெட்ட பெயரை எடுத்ததை தொடர்ந்து, அதில் பங்கு பெற்ற பிரியங்கா ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 29, 2024, 01:16 PM IST
  • பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா போட்ட பதிவு
  • என்ன சொல்லியிருக்கிறார்?
  • இதோ பாருங்க..
குக் வித் கோமாளி பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா வெளியிட்ட முதல் பதிவு! என்ன தெரியுமா?  title=

Priyanka First Post After Cooku With Comali 5 : தமிழ் தொலைக்காட்சிகளுள் இருக்கும் நிகழ்ச்சிகளிலேயே மக்களின் மனதை பிடித்த ஷோவாக விளங்கியது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்த பஞ்சாயத்து, சில நாட்களுக்கு முன்பு தீயாய் பரவியது. 

குக் வித் கேமாளி 5 : 

ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. 2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டு வரை 5 சீசன்களாக அறிமுகமானது. 4வது சீசன் வரை, செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். ஆனால், 5வது சீசனில் பல விஷயங்கள் மாறியது. முதலில், வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புது ஜட்ஜ் ஆக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கினார். இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த நிறுவனமும் இதிலிருந்து விலகியது. 

4வது சீசனில் கோமாளிகளாக இருந்த பலர், அதன் பின்பு அத்தயாரிப்பு நிறுவனத்தால் ஒளிபரப்பாகி வரும் இன்னொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரக்ஷனுடன் இன்னொரு தொகுப்பாளராக மணிமேகலை கலந்து கொண்டார். 

மேலும் படிக்க | மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையில் உண்மையில் நடந்தது என்ன? பிரபலம் சொன்ன தகவல்

மணிமேகலை-பிரியங்கா மோதல்:

சில வாரங்களுக்கு முன்பு, மணிமேகலை ஒரு பதிவை வெளியிட்டார். அதில், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் இனி இதில் கலந்து கொள்வதாக இல்லை என்றும் கூறினார். இதையடுத்து, அவர் வெளியிட்ட வீடியோவில் குக் வித் கோமாளிக்கு, குக் ஆக வந்த பெண் தொகுப்பாளர் ஒருவர், அவர் வேலையை விடுத்து பிறர் வேலைகளையும் பார்ப்பதாகவும், தனது சுய மரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது என்ற நோக்கத்துடன் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் கூறினார். இது ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

பிரியங்கா-மணிமேகலை மோதல் குறித்து பிரபலங்கள் சிலர் ஆளுக்கு ஒரு கருத்தாக கூறினர். மக்கள் பலர், மணிமேகலையின் பக்கம் பேச, குக் வித் கோமாளி போட்டியாளர்கள், கோமாளிகள் சிலர் பிரியங்காவின் பக்கம் பேசினர். மணிமேகலை, தனக்கு ஆதரவு அதிகமானதை தொடர்ந்து, தனது வீடியோக்களில் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்தவர்களை மறைமுகமாக கலாய்த்தார். நிலைமை இப்படியே சென்று கொண்டிருக்க, பிரியங்காவின் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

பிரியங்கா வெளியிட்ட பதிவு:

பிரியங்கா, கடந்த சில நாட்களாக தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்த நிலையில், தற்போது புதிதாக தனது ஸ்டோரியில் பழைய வீடியோவை ரீ-ஷேர் செய்திருக்கிறார். தனது 30வது பிறந்தநாளை அடுத்து அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Priyanka Deshpande

அந்த ஸ்டோரியை அடுத்து, அவர் வர்கலா சென்று வந்த Vlog வீடியாேவையும் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | பிரியங்கா vs மணிமேகலை பிரச்சனை.. சண்டை போட்ட ஆடியோ லீக்! நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News