’புருவப் புயல்’ புகைப்படத்தினை இப்படியா பயன்படுத்துவது!

இன்றைய காலகட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறை பல விசித்திர விஷயங்களை கையாண்டு வருவது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

Last Updated : Mar 24, 2018, 06:29 PM IST
’புருவப் புயல்’ புகைப்படத்தினை இப்படியா பயன்படுத்துவது! title=

இன்றைய காலகட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறை பல விசித்திர விஷயங்களை கையாண்டு வருவது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

வதோதராவின் இளைஞர்களை எப்படியும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்துவிட வைக்கவேண்டும் என்பதில் வதோதரா போக்குவரத்து காவல்துறை குறிகோளாக உள்ளது. இதனால் பல கேளிக்கை விஷயங்களையும் காவல்துறையினர் கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது இணையத்தில் பிரபலமாகி வரும் நம் புருவப் புயல் புகைப்படத்தினை பயன்படுத்தியுள்ளது. 

மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள ’மாணிக்ய மலரே பூவி’ பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். 

குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிவிட்டவர் இவர். தற்போது இவரின் பெயரை பயண்படுத்தினாலே பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது.

இந்நிலையில் இவரது புகழ்ச்சியை பயன்படுத்தி வதோதரா போக்குவரத்து துறை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

Trending News