காதலி விலகி செல்வதற்கான 5 அறிகுறிகள், முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்

காதலி உங்களுடன் இருக்கக்கூடாது என முடிவெடுத்துவிட்டால், விலகிச் செல்வதற்கான அறிகுறிகளை காட்ட தொடங்குவார்.

உங்களுடனான உறவில் திருப்தி ஏற்படாதபோது காதலி விலகிச் செல்ல முடிவெடுத்தார் எனில், இந்த 5 அறிகுறிகள் மூலம் புரிந்து கொள்ளுங்கள்

1 /10

காதலில் இருக்கிறீர்கள் என்றால், இருவருக்கும் இடையில் மனக்கசப்பு தொடங்கிவிட்டது என்றால் ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் எழுவது இயல்பு தான். இருப்பினும் பிரிந்து செல்வது என்பது உட்சபட்சமாக எடுக்கப்படும் முடிவு. 

2 /10

இந்த சூழலில் காதலி உங்களை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்தால் என்னென்ன அறிகுறிகள் எல்லாம் தென்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதனை வைத்து நீங்கள் அதிர்ச்சியான சூழலை எதிர்கொள்வதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். 

3 /10

உங்களுடன் பேச மாட்டார். கண்ணில் தென்பட்டாலும் பார்த்தும் பார்க்காததுபோல் விலகிச் சென்றுவிடுவார். உங்களுடன் பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கமாட்டார். எந்தவகையில் நீங்கள் தொடர்பு கொண்டாலும் உங்களை முழுவதுமாக புறக்கணித்துவிடுவார். 

4 /10

உங்களுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்துவிட்டு ஒருமுறைகூட உங்களிடன் பேசுவதற்கு முன்வரவில்லை என்றால், அவரை நீங்கள் மீண்டும் மீண்டும் எதிர்பார்க்க வேண்டாம். ஏனென்றால் அவர் உங்களைவிட்டு செல்ல முடிவெடுத்துவிட்டார் என்றே அர்த்தம்.

5 /10

காதலியை பார்க்க வேண்டும் என்ற ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் உங்களுக்குள் இருப்பதைப் போல அவரிடம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிச்சயம் உங்களிடம் பேச முன் வந்திருப்பார். பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஏதாவதொரு முயற்சியை எடுத்திருப்பார்

6 /10

ஆனால், அப்படியான சமிக்கைகள் எந்த வழியிலும் வரவில்லை என்றால், உங்களைப் போன்ற ஆசையும், எதிர்பார்ப்பும் அவருக்கு இல்லை என்றே அர்த்தம். அதனால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வீணாகவே செல்லும். 

7 /10

அந்த முயற்சிகள் உங்களுக்குள் காயத்தை, வலியையும் அதிகப்படுத்துமே தவிர காதலியுடன் சேர்க்க வாய்ப்பில்லை. அவராக வரும்வரை காத்திருங்கள். வரவில்லை என்றால் விலகிச் சென்று உங்கள் வாழ்க்கையை பார்ப்பது நல்லது. 

8 /10

ஏனென்றால் உங்களை விட்டுச் செல்ல முடிவெடுத்த காரணத்தாலேயே அவரின் நடவடிக்கைகள் எல்லாம் இப்படி இருக்கின்றன என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். 

9 /10

உங்களைக் காட்டிலும் வேறொன்றுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கிவிட்டார் என்றே அர்த்தம். எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது. ஆனால், அந்த குறிப்பிட்ட காலம் என்பதை தவறாக புரிந்து கொண்டு வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதீர்கள்.

10 /10

பிடிக்காதவர்களை எந்தவழியில் துரத்தினாலும் பயனில்லை. உங்களை வேண்டாம் என்று கூறியவர் பின்னால் செல்வது நேரத்தையும், அழகான வாழ்க்கையையும் சீரழித்துக் கொள்வதற்கு சமம். மாறாக உங்கள் குடும்பம், உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியாக இருக்க அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்குங்கள்.