8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ

8th Pay Commission: புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களை பற்றிய தெளிவு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவின் அமைப்பு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்பதற்கான விடை ஆகியவை இதில் அடங்கும்.  இவற்றுக்காக ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

8th Pay Commission: புதிய அரசு அமைந்தவுடன் 2024 ஆம் ஆண்டே எட்டாவது ஊதியக்குழு கொண்டுவரப்பட்டால், அதன் செயலாக்கம் முடிந்து முழுமையாக அது அமலுக்கு வர இரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது 8வது ஊத்யக்குழு 2026 -இல் அமல்படுத்தப்படும். 

1 /9

நாடு முழுதும் மக்களவைத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளிவரவும், யார் வெற்றிபெறவுள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ளவும் மக்கள் ஆவலோடு உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களும் இதற்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது காத்திருப்புக்கு மற்றொரு காரணமும் உள்ளது.

2 /9

புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களை பற்றிய தெளிவு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவின் அமைப்பு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்பதற்கான விடை ஆகியவை இதில் அடங்கும். 

3 /9

புதிதாக அமையவுள்ள அரசு 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பை உடனடியாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுகின்றது. அந்த வகையில், இந்த ஆண்டு 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என ஊழியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனினும் அரசு சார்பில் இது குறித்து இன்னும் எதுவும் கூறப்படவில்லை. 

4 /9

புதிய அரசு அமைந்தவுடன் 2024 ஆம் ஆண்டே எட்டாவது ஊதியக்குழு கொண்டுவரப்பட்டால், அதன் செயலாக்கம் முடிந்து முழுமையாக அது அமலுக்கு வர இரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது 8வது ஊத்யக்குழு 2026 -இல் அமல்படுத்தப்படும். அறிமுகத்திக்கும் செயலாக்கத்திற்கும் இடையில் சுமார் 2 ஆண்டு காலம் ஆகும் என்பதல் இது குறித்த பணிகள் விரைவாக தொடங்கப்பட வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

5 /9

8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்தோடு சில வழக்கமான முறைகளும் மாற்றப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பள திருத்தம் மற்றும் ஊதியக் கமிஷனுக்கான கால அவகாசம் பத்து வருடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக அரசு ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்ய ஆரம்பிக்கலாம் என்று ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.   

6 /9

ஊழியர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரைகள் வந்துள்ளன. 7வது ஊதியக் குழுவிலேயே இது பரிந்துரைக்கப்பட்டது. இது தவிர சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7 /9

ஜனவரி 2024 -க்கான டிஏ (DA) -வை மத்திய அரசு 4 சதவிகிதம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவார்ணம் ஆகியவை 50% ஆக உயர்ந்தன. இது ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல ஏற்றத்தை கொண்டு வந்தது.  

8 /9

டிஏ ஹைக்: ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகின்றது. இதுவரை ஜனவரி 2024 -க்கான குறியீட்டு எண்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. எனினும், இதன் அடிப்படையில் வைத்து, இதன் போக்கை பார்த்தால், ஜூலையில் அகவிலைப்படி 4% உயரக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.