சனியின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு தீபாவளியில் தொடங்கிய பொற்காலம் பொங்கல் வரை நீடிக்கும்!

சனி பகவான், கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி, மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். ஜனவரி 17 ஆம் தேதி வரை அவர் இந்த நிலையில் நீடிப்பார் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தின் தாக்கத்தை, அனைத்து ராசிகளின் வாழ்விலும் தெளிவாக காணலாம். ஒரு கிரகம், பெயர்ச்சி ஆகும் போது,  சஞ்சரிக்கும் போது, வக்ர பெயர்ச்சி அடையும் போது, சில  ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கிறது. 

1 /4

சனிபகவான் அக்டோபர் 23-ம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ள நிலையில், ஜனவரி 17-ம் தேதி வரை அதில் சஞ்சரிக்க உள்ளார். இதன் போது சனி அவிட்ட நட்சத்திரத்தில் வசிக்கிறார். இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்த்தை சேர்ந்தது. சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை உணர்வு இருக்கும் நிலையில், சனி செவ்வாய் கிரகத்தின் சுப யோகமாக மாறப் போகிறார் என்றும், இது சில ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும் என்றும், அவர் குபேர யோகம் பெற்று பொருளாதார ரீதியாக வலுப்பெறுவார்கள்.

2 /4

துலாம் - இந்த ராசிக்காரர்களும் சனி திசையினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சனிபகவானின் வக்ர நிவர்த்தியினால் பெரும் பலன்களைப் பெறுவார்கள். இதுமட்டுமின்றி இவர்களின் வருமானமும் அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும். குடும்பத்தின் உதவியால் எந்த ஒரு பெரிய காரியமும் முடியும். எங்கிருந்தோ திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். ஆன்மீக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். வாழ்க்கையில் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

3 /4

மகரம் - சனி அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசிக்கு மாறியுள்ளார். தற்போது இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. ஆனால் சனியின் வக்ர நிவர்த்தியினால் இந்த ராசிக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தடைபட்ட பணிகள் நிறைவேறும். மேலும் பண ஆதாயமும் உண்டாகும். இந்த நேரத்தில் சனியை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும்.

4 /4

கும்பம் - இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். எனினும் சனியின் இந்த வக்ர நிவர்த்தியினால் கும்ப ராசிக்காரர்களின் பிரச்சனைகள் நீங்கும். நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரத்திலும் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.