சென்னையில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பை தடுத்து நிறுத்திய காவல்துறை!

சென்னை விமான நிலையத்தில் 1.24 கோடி ரூபாய் செலுத்தி இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெறும் நிலையில் காவல்துறையில் அனுமதி பெறவில்லை என தகவல் சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்திய போலீசார்

 

1 /5

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து உள்ளிட்ட பல காரணங்களுக்காக இடையில் நிறுத்தபட்டது. பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.  

2 /5

இந்நிலையில் சென்னை  பன்னாட்டு விமான நிலையத்தில்  இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விமான நிலைய ஆணையத்தில் 1.24 கோடி பணம் செலுத்தி அனுமதி பெற்றுள்ளனர்.  

3 /5

இந்த நிலையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற போலீசார் காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் எப்படி படப்பிடிப்பு நடத்துகிறீர்கள் என படப்பிடிப்பு குழுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.  

4 /5

மேலும் சிறுது நேரம் படபிடிப்பை நிறுத்திய போலீசார் சென்னை விமான நிலைய அத்தாரிட்டி இடம் அனுமதி பெற்றுள்ள சான்றிதழ் காண்பிக்குமாறு போலீசார் கேட்டுள்ளனர். இதையடுத்து பட குழு சென்னை விமான நிலையத்தில் அனுமதி பெற்ற சான்றிதழை விமான நிலைய போலீசாரிடம் காண்பித்துள்ளனர்.  

5 /5

இததையடுத்து சென்னை விமான நிலைய ஆனையத்யிடம் அனுமதி பெற்றுவிட்டதால் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்க போலீசார் அனுமதித்துள்ளனர். விமான நிலைய ஆணையத்தில் அனுமதி பெற்ற பிறகு காவல்துறையில் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.