கஜகேசரி யோகம்.... புதன்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள்... பலன்களும் பரிகாரங்களும்

ராசிபலன்: மார்ச் மாதம் 13ஆம் தேதி புதன்கிழமை, மேஷ ராசிக்கு மாறுகிறார். மேஷ ராசியில் குரு பகவான் இருக்கும் நிலையில், சந்திரனும், குரு பகவானும் இணைந்து கஜகேசரி யோகம் உருவாகிறது.

சுக்லபக்ஷ துவிதிய திதியான நன்னாளில், கஜகேசரி யோகத்துடன், ஐந்திணை யோகம், ரவி யோகம் அஸ்வினி நட்சத்திரம் ஆகிய சுப சேர்க்கையினால் பலன் பெற போகும் அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்வோம்.

1 /7

மிதுன ராசியினருக்கு மார்ச் மாதம் 13ஆம் தேதி, சாதகமான நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கி, கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். தொழிலை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும். சொத்து வாங்க நினைத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு கை கூடி வரும்.

2 /7

கடக ராசியினருக்கு மார்ச் மாதம் 13ஆம் தேதி, பண வரவை கொடுக்கும் நாளாக இருக்கும். வருமானம் லாபம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு உங்களைத் தேடி வரும். நீங்கள் எதிர்பாராத வகையில் முக்கிய ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும். முதலீடு செய்வதற்கு சாதகமான நாளாக இருக்கும்.

3 /7

விருச்சிக ராசியினருக்கு மார்ச் மாதம் 13ஆம் தேதி, மன திருப்தியை கொடுக்கும் நாளாக இருக்கும். பிரச்சினைகள் நீங்கி அமைதி பிறக்கும். நிதி ஆதாயம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.. ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.

4 /7

தனுசு ராசிகளுக்கு மார்ச் மாதம் 13ஆம் தேதி, நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் நாளாக இருக்கும். ஆன்மீகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நேர்மறையான சிந்தனை தோன்றும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை சிறப்பாக கையாளுவீர்கள். செயல் திறன் மூலம் வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள்.

5 /7

மீன ராசிகளுக்கு மார்ச் மாதம் 13ம் தேதி, லாபத்தை அள்ளிக் கொடுக்கும் நாளாக இருக்கும். முதலீடுகளால் லாபம் பெருகும். குழந்தைகள் தரப்பிலிருந்து மனதை மகிழ்விக்கும் நல்ல செய்தி வரும். உங்கள் கனவுகள் நினைவாகும் வாய்ப்பு உண்டு.. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

6 /7

நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும், விநாயகப் பெருமானை வணங்கி, அவருக்கு வெள்ளம் சமர்ப்பித்து வழிபடலாம். விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்வதால், அறிவாற்றலை கொடுக்கும் புதனின் நிலை வலுப்படும். தடைகள் மற்றும் நோய்களிலிருந்து விடுபட பச்சை வஸ்திரத்தை தானம் செய்யலாம்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.