Bank Locker: பேங்க் லாக்கருக்கான புதிய விதிகள்; முழு விபரம் இங்கே..!!

வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக (Bank Locker) வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

1 /5

வங்கியில் தீ விபத்து அல்லது கட்டிடம் இடிந்து விழுந்து சேதம் அடைதல், போன்ற சமயங்களில், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கவும் புதிய விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

2 /5

ஆனால், புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைபேரழிவின் காரணமாக வங்கி லாக்கர் மற்றும் லாக்கரில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது.

3 /5

வங்கி லாக்கரில் அபாயகரமான பொருட்கள் மற்றும்  சட்டத்திற்குப் புறம்பான பொருட்களை வைக்கக்கூடாது. அதனை மீறினால் வாடிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய விதிகள் கூறுகின்றன.

4 /5

திருத்தப்பட்ட ஆர்பிஐ வழிகாட்டுதல்கள் மூலம், நீண்ட நாட்களுக்கு திறக்கப்படாமல் இருக்கும் வங்கி லாக்கரை உடைக்க, வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படுள்ளது.

5 /5

நீண்ட நாட்கள் இயக்கப்படாமல் இருக்கும் லாக்கரில் உள்ளவற்றை, அதன் நியமனதாரர்/சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கவும்  அல்லது பொருட்களை வெளிப்படையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கவும் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.