7th Pay Commission: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள், DA-வுக்காக ஜூலை வரை காத்திருக்க வேண்டாம்!!

7th Pay Commission: 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் முகங்களில் விரைவில் புன்னகை பொங்கும். மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தற்போதைய 28 சதவீத அடிப்படையில் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) அளிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது. 

இவை பல நாட்களாக நிலுவையில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பை அரசாங்கம் தடை செய்திருந்தது. 

1 /5

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாளர் கூட்டமைப்பு (Association of Employees Confederation of Central Government Employees and Workers) நடப்பு அரசாங்க கருவூலத்தின் கணக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் வைத்து, இது குறித்து கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய பணவீக்க விகிதத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும், 28 சதவிகித அடிப்படையில் அகவிலைப்படியை வழங்க நிதி அமைச்சரிடம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர் என்று சங்கம் தெரிவித்துள்ளது. கடமையில் இருந்தபோது பல ஊழியர்கள் உயிர் இழந்தனர். இவை அனைத்தையும் மனதில் வைத்து, நிதி அமைச்சர் 2020 ஜனவரி முதல் 28 சதவீதம் என்ற விகிதத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 /5

ஏப்ரல் 2020 இல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை நிதி அமைச்சகம் நிறுத்தியது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட கடினமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது. இதை 2021 ஜூலை வரை அரசாங்கம் தடை செய்திருந்தது. ஆனால் இப்போது இந்த கொடுப்பனவுகள் ஜூலை முதல் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 /5

கொரோனாவின் போது, ​​தொழில்துறை உற்பத்தி -57% ஆக குறைந்து, அக்டோபரில் இது 3.6% அதிகரித்துள்ளது. மேலும், 2020 மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ .97,597 கோடியாக இருந்தது. 2020 டிசம்பரில் இது 1,15,000 கோடி ரூபாயை எட்டியது. இதனால் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இதை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டிய சங்கம், அகவிலைப்படியை இப்போது அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆகையால், இதற்கு ஜூலை 2021 வரை காத்திருக்க தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

4 /5

கொரோனா தொற்று நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறும் கூடுதல் அகவிலைப்படியை 2020 ஜனவரி 1 முதல் அரசாங்கம் நிறுத்தியது. 2020 ஜூலை 1 முதல் 2021 ஜனவரி 1 வரையிலான அடுத்த தவணை அகவிலைப்படியும் வழங்கப்படாது என்று செலவுத் துறை ஒரு குறிப்பில் கூறியுள்ளது. இருப்பினும், தற்போதைய வீதத்தில் DA, DR தொடர்ந்து செலுத்தப்படும். மத்திய அரசு தனது ஊழியர்களின் DA-வில் 4 சதவீதம் அதிகரிக்க ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர் இது 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

5 /5

செய்தி நிறுவனமான பி.டி.ஐ படி, ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் நிவாரணம் ஆகியவை நிறுத்தப்பட்டதால், 2021-22 மற்றும் அதன் முந்தைய நிதி ஆண்டுகளில் சுமார் ரூ .37,530 கோடி சேமிக்கப்பட்டிருக்கும் என தெரிய வருகிறது. பி.டி.ஐ படி, மாநில அரசுகள் பொதுவாக மையத்தின் உத்தரவின் பேரில் இயங்குகின்றன. DA, DR தவணையை நிறுத்தியதால், மாநில அரசுகளால் சுமார் 82,566 கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.