புகைப்படங்கள்!! கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் 11 மாவட்டங்கள் மூழ்கின

1 /6

கேரளாவில் தொடரும் கனமழையால் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். அதில் 25 பேர் நிலச்சரிவில் சிக்கியும், 4 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். (PTI Photo)  

2 /6

கேரளாவை பொருத்த வரை இதுவரை 53,501 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களை 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். (PTI Photo)  

3 /6

கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன. (PTI Photo)  

4 /6

கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. வெள்ள நிவாரணம் தொடர்பாக கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இது தொடர்பாக கேரளா முதல்-அமைச்சர் பினராயி விஜயனுடன் ஆலோசனை செய்தேன் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரித்துள்ளார். (PTI Photo)  

5 /6

கேரளா மாநிலத்தில் உள்ள 58 அணைகளில் 24 அணையின் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு கடந்து விட்டது. இதனால் நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (IANS Photo)  

6 /6

வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எஃப் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. (PTI Photo)