IPL 2022 mega auction: ஏலத்தில் அதிக சம்பள உயர்வு பெற்ற 5 வீரர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் 2022 (IPL 2022 mega auction) ஏலத்தில் பத்து அணிகளும் பணத்தைத் வாரி இறைத்து, தரமான வீரர்களை இணைத்துக் கொள்வதை உறுதிசெய்தது.

மெகா ஏலத்தில் பெரும் ஒப்பந்தங்களைப் பெற்றதால், சில வீரர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. ஐபிஎல் 2022 ஏலத்தில் பெரும் சம்பள உயர்வு பெற்ற ஐந்து வீரர்கள் இவர்கள் தான்...

1 /5

வனிந்து ஹசரங்க (RCB) - ரூ. 10.25 கோடி   ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ரூ. 10.75 கோடிக்கு (INR 107.5 மில்லியன்) இலங்கை ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. மிக அதிகமான சம்பள உயர்வைப் பெற்ற மற்றொரு வீரர் ஆவார் இவர். கடந்த ஆண்டு ஆடம் ஜம்பாவுக்கு மாற்றாக RCB அணியால், ஹசரங்கவின் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்தில் (INR 5 மில்லியன்) வாங்கப்பட்டார்.   இப்போது தனது கடைசி சம்பளத்தைவிட 20 மடங்குக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். Photo - IPL

2 /5

பிரசித் கிருஷ்ணா (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - ரூ.9.80 கோடி   ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் ரூ 9.80 கோடிக்கு (INR 98 மில்லியன்) இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு KKR அணியில் கிருஷ்ணா இடம்பெற்றிருந்தார். அவர் 2018 இல் 20 லட்ச ரூபாய்க்கு KKRஅணியில் சேர்ந்தார்.  Photo - IPL

3 /5

லியாம் லிவிங்ஸ்டோன் (Punjab Kings) - ரூ. 10.75 கோடி  ராஜஸ்தான் ராயல்ஸ் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை 2021 இல் ரூ. 75 லட்சத்திற்கு (INR 7.5 மில்லியன்) இணைத்துக் கொண்டது. ஐபிஎல் 2022 ஏலத்தில் லிவிங்ஸ்டோனை வாங்க, அணிகளுக்கு இடையே மிகப்பெரிய ஏலப் போர்த் தூண்டியது. இறுதியில் அவர் பஞ்சாப் கிங்ஸால் ரூ. 11.50 கோடிக்கு (INR 115 மில்லியன்) ஒப்பந்தம் செய்யப்பட்டார். Photo - IPL

4 /5

ஹர்ஷல் படேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) - ரூ. 10.55 கோடி ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலை மீண்டும் தங்கள் அணியில் சேர்க்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அதிக செலவு செய்தது. ஹர்ஷலை டெல்லி கேப்பிட்டல்ஸ் 2018 இல் அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்தில் (INR 2 மில்லியன்) வாங்கியது, அதற்கு முன்பு அதே விலையில் கடந்த ஆண்டு RCB அவரை ஒப்பந்தம் செய்தது. கடந்த சீசனில் RCB அணிக்காக வாங்கிய சம்பளத்தை விட 50 மடங்குக்கு மேல் இந்த முறை ஹர்ஷல் படேல் ஊதியம் வாங்குகிறார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 10.75 கோடி (INR 107.5 மில்லியன்) ரூபாய்க்கு ஹர்ஷல் வாங்கப்பட்டார்.   Photo - IPL

5 /5

தீபக் சாஹர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) -  ரூ. 13.20 கோடி   இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) வெறும் ரூ. 80 லட்சத்திற்கு (INR 8 மில்லியன்) எடுத்தது. அவர் ரூ. 14 கோடிக்கு (INR 140) மீண்டும் வாங்கப்பட்டார்.  கடந்த வாரம் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேயின் மிக விலையுயர்ந்த தேர்வாக தீபர் சாஹர் மாறினார். ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரருக்காக ரூ 10 கோடிக்கு (INR 100 மில்லியன்) சென்னை அணி கொடுத்ததில்லை, ஆனால் இந்த முறை சாஹருக்கு மிக அதிகத் தொகை கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.   Photo - IPL