புதன் பெயர்ச்சியினால் நெருக்கடிகளை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

புதன் பெயர்ச்சி பலன்கள்: மார்ச் 31-ம் தேதி மேஷ ராசியில் புதன் கிரக பெயர்ச்சி ஆகியுள்ள நிலையில் இதனால் சில ராசிக்காரர்கள் சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

புதன் பெயர்ச்சி பலன்கள்: மார்ச் 31-ம் தேதி மேஷ ராசியில் புதன் கிரக பெயர்ச்சி ஆகியுள்ள நிலையில் இதனால் சில ராசிக்காரர்கள் சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

 

1 /5

புதன் கிரகம் நுண்ணறிவு, கல்வி, பகுத்தறிவு திறன் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றுக்கான கிரகமான புதன் தனது ராசியை மாற்றப் போகிறார். மார்ச் 31, 2023 அன்று ராசியில் புதன் பெயர்ச்சி ஆகியுள்ள நிலையில், சில ராசிக்காரர்களுக்கு இது நெருக்கடியான கால கட்டமாக இருக்கும்.

2 /5

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது குழந்தைகளின் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். உங்கள் புகழ் மற்றும் பெயர் கூட பாதிக்கப்படலாம். நிதி வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.  

3 /5

கடகம் ராசிகள் புதனின் சஞ்சாரத்தால்  பணியிடத்தில் சில கடினமான சவால்களை சந்திக்க நேரிடும். வேலை அழுத்தம் அதிகரிக்கலாம், அதனால் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். உங்கள் வேலையை இழக்கும் வாய்ப்புகள் கூட உள்ளன. உங்கள் நிலை அல்லது நற்பெயர் கூட கேள்விக்குறியாகலாம்.

4 /5

கன்னி ராசிக்காரர்கள் வேலையை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால், அதற்கு சரியான நேரம் அல்ல. பணியிடத்தில் தேவையற்ற வதந்திகளில் இருந்து விலகி இருங்கள், இல்லையெனில் உங்கள் இமேஜ் கெட்டுவிடும். நிதி நிலை இந்தக் காலகட்டத்தில் மோசமடையலாம். நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.  

5 /5

புதனின் சஞ்சாரத்தால், கும்ப ராசிகள் உறவினர்களுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜாதகத்தில் புதனின் நிலை சாதகமற்றதாக இருந்தால், உங்களுக்கு சிரமங்கள் மேலும் அதிகரிக்கலாம். புதிய திட்டத்தில் தாமதம் ஏற்படலாம். புதனின் எழுச்சி கும்ப ராசியினருக்கு பொருளாதார ரீதியாக சவாலாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களும் இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.