தனுஷை சீண்டினாரா சிவகார்த்திகேயன்...? கொந்தளிக்கும் ரசிகர்கள் - என்ன நடந்தது?

Sivakarthikeyan Viral Speech: கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகரும், அதன் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

  • Aug 13, 2024, 17:14 PM IST

சிவகார்த்திகேயன் பேச்சை தொடர்ந்து சமூக வலைதலங்களில் தனுஷ் ரசிகர்கள் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

1 /8

சிவகார்த்திகேயனின் SK Productions தயாரிப்பில், சூரி நடித்திருக்கும் திரைப்படம் 'கொட்டுக்காளி'. இந்த திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கிறார்.   

2 /8

பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டுப்பட்டு வருகிறது. விருதுகளையும் வென்றுள்ளது. இவரின் முந்தைய திரைப்படமான கூழாங்கல் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் விருது வாங்கியிருந்தது. இந்த விருது உலகளவில் சுதந்திரமாகவும், பரிசார்த்த ரீதியிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு வழங்கப்படுவதாகும்.   

3 /8

கொட்டுக்காளி திரைப்படம் வரும் ஆக. 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், இன்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.  

4 /8

இந்நிகழ்வில் படக்குழு மட்டுமின்றி இயக்குநர்கள் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மேடையில் படம் குறித்து பேசினர். அதில், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் (Sivakarthikeyan) பங்கேற்று பேசியிருந்தார்.  

5 /8

15 நிமிடங்களுக்கும் மேலான அவரது பேச்சில் கடைசி கட்டத்தில்,"இந்த படத்தை நீங்கள் வெற்றியடையவைத்தால், கொட்டுக்காளி மாதிரி இன்னும் பல திரைப்படங்கள் SK Productions மூலம் வெளிவரும். இதேபோல் பல இயக்குநர்களை அடையாளம் கண்டு நாம் வாய்ப்பளிப்பேன்" என்றார்.  

6 /8

அதை தொடர்ந்து பேசும்போது,"யாரையும் கண்டுபிடிச்சு, 'நான்தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன், நான்தான் ரெடி பண்ணேன்' என நான் சொல்ல மாட்டேன். என்னை அப்படிதான்,'நான்தான் வாழ்க்க கொடுத்தேன்' என சொல்லி சொல்லி பழகிவிட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் இல்லை" என்றார். இதுதான் சமூக வலைதலங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.  

7 /8

சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலேயே பிரபலமானவர். அவர் மெரினா திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமானாலும் 3, எதிர்நீச்சல் ஆகிய திரைப்படங்களின் மூலம் பெரிய வாய்ப்புகளை வழங்கியவர் நடிகர் தனுஷ்தான். எதிர்நீச்சல் திரைப்படத்தை தயாரித்தவர் தனுஷ் ஆவார்.  

8 /8

எனவே, சிவகார்த்திகேயன், தனுஷை (Dhanush) குறிப்பிட்டுதான் மறைமுக இப்படி பேசினார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதலங்களில் சிவகார்த்திகேயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ அவர் பணியாற்றிய தனியார் தொலைக்காட்சியை அந்த பேச்சில் குறிப்பிடுவதாகவும் கூறுகின்றனர். எனினும் தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஏற்கெனவே பிணக்கு இருப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.