Students Corner: உயர் கல்விக்காக கடன் வாங்க திட்டமா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

Loan Corner: பட்டப்படிப்புக்கு பிறகு உயர் கல்வி படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கான உதவிக் குறிப்புகள் இவை... 

உள்நாடு அல்லது வெளிநாடு என எங்கு உயர்கல்வி படிக்கத் திட்டமிட்டாலும் அதற்கான கடன் வாங்குவது குறித்த விவரமான விளக்கக் குறிப்பு...

மேலும் படிக்க | அண்ணல் காந்தியின் 154வது பிறந்தநாள் அனுசரிப்பு! ராட்டை தினத்தன்று இந்தியாவின் அஞ்சலி

1 /5

நீங்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உயர் படிப்பைத் தொடர விரும்பினால், செலவு மிக அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கல்விக் கடன் வாங்குவது நல்லது.

2 /5

படிப்புக்கு ஏற்றவாறு கடன் தொகை மாறுபடும். பல வங்கிகள் இந்தியாவில் படிப்பதற்கு ரூ.50 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் படிக்க ரூ.1 கோடி வரையிலும் கடன் வழங்குகின்றன. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன.  

3 /5

வெளிநாட்டுப் பயணம் மற்றும் கல்வி கட்டணம் உட்பட படிப்பு தொடர்பான அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது. வங்கிகள் எளிதாக திருப்பிச் செலுத்தும் விருப்பங்களையும் வழங்குகின்றன.  

4 /5

10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்ச்சி சான்றிதழ். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சேர்க்கைக்கான கடிதம். கட்டண அமைப்பைக் குறிப்பிடும் தாள்கள். விண்ணப்பதாரர் மற்றும் உத்தரவாததாரரின் KYC ஆவணங்களும் தேவை.

5 /5

பல வங்கிகளுக்கு ரூ.4 லட்சத்துக்கும் குறைவான கடனுக்கு பிணை தேவையில்லை. ஆனால் ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான கடகல்விக் கடனை உடனடியாக திருப்பிச் செலுத்தத் தேவையில்லைனுக்கு, உத்தரவாதம் கொடுப்பவர்கள் தேவைப்படலாம். ரூ. 7.5 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு பிணை கட்டாயம். வெளிநாட்டில் படிக்க கடன் பெற காப்பீடு அவசியம். . கல்விக் கடனை உடனடியாக திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. படிப்பை முடித்த சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து திருப்பிச் செலுத்தத் தொடங்கலாம். இது ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.