பார்த்து மகிழுங்கள் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு in Pics

சீறிப்பாயும் காளைகள்! உற்சாகத்துடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! பார்த்து மகிழுங்கள் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு புகைப்படங்களாக...

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read | ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி; கட்டுபாடுகள் என்னென்ன?

1 /11

இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது

2 /11

இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். 

3 /11

அவனியாபுரத்தில் முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக களத்தில் இறக்கப்பட்டன. 

4 /11

வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முயன்று வருகின்றனர். இந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

5 /11

பார்வையாளர்கள் வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்

6 /11

இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 788 காளைகள் களமிறக்கப்படுகின்றன. 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

7 /11

ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். 

8 /11

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மெரீனா போராட்டம், இன்று மஞ்சுவிரட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

9 /11

மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டுள்ளன

10 /11

இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 

11 /11

மாலை 4 மணி வரை போட்டி நடைபெறுகிறது.