தினமும் தலைவலி பாடாய் படுத்துதா? இவை காரணங்களாக இருக்கலாம்

Headache: தலைவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். தலைவலி வந்துவிட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை.

சிலருக்கு அடிக்கடி தலைவலி வருவதுண்டு. அதுவும் இந்த வலி மிக அதிகமாகவும் இருப்பதுண்டு. இப்படிப்பட்ட தலைவலிக்குப் பின்னால் ஒன்று மட்டுமல்ல, பல காரணங்கள் இருக்கலாம். பல்வேறு காரணங்களால் ஏற்படும் தலைவலியை வெவ்வேறு வழிகளில் குணப்படுத்த வேண்டும். இதற்கு மருத்துவ உதவியை நாடுவது சிறந்தது. அடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

ஒருவருக்கு போதுமான தூக்கம் இல்லை என்றாலும், அவர் தலைவலியால் பாதிக்கப்படலாம். உங்களின் வாழ்க்கை முறை 7-8 மணிநேரம் உறங்க உங்களை அனுமதிக்க முடியவில்லை என்றால், உங்கள் தினசரி தலைவலிக்கு இதுவே காரணமாக இருக்கலாம். தூக்கமின்மை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. 

2 /8

எதையாவது பற்றி அதிகம் கவலைப்படுவது அல்லது அதைப் பற்றி யோசிப்பதும் தலைவலிக்கு காரணமாக இருக்கலாம். அதிக மன அழுத்தம் இருந்தால், அந்த நபரால் தூங்க முடியாது. இது தலைவலிக்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், கவலை மற்றும் மன அழுத்தத்தை முடிந்தவரை தவிர்ப்பது அவசியம்.   

3 /8

தூக்கம் வராமல் தடுக்க பலர் காபியை நம்பியிருக்கிறார்கள். காஃபினின் அதிகப்படியான பயன்பாடு தலைவலியை ஏற்படுத்தும். காஃபியை மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். அதிக காஃபின் உட்கொள்வது தினசரி தலைவலியை ஏற்படுத்தும்.

4 /8

சுற்றிலும் அதிக சத்தம் இருக்கும் சூழலில் நீங்கள் வாழ்ந்தால், உங்கள் தினசரி தலைவலிக்கு இதுவும் காரணமாக இருக்கலாம். அத்தகைய சூழல் அமைதியான வாழ்க்கை முறைக்கு நல்லதல்ல. இது தலைவலியை ஏற்படுத்தலாம்.

5 /8

சில சமயங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் தலைவலி ஏற்படலாம். உடலில் நீர்ச்சத்து குறைவதால் நீரிழப்பு ஏற்பட்டு தலைவலியை உண்டாக்கும். அதிகமாக மது அருந்துவதாலும் தலைவலி ஏற்படுகிறது. மது அருந்துவதால் நீரிழப்பு ஏற்படுகிறது.

6 /8

சைனஸும் கடுமையான தலைவலியை ஏற்படுத்துகிறது. சைனஸில் தலைவலியுடன், முகத்திலும் வலி இருக்கும். இதைத் தவிர்க்க, சைனஸ் சிகிச்சையைப் பெறுங்கள். இதில் மருத்துவைரின் ஆலோசனையை பெறுவது நல்லது. 

7 /8

கண்கள் பலவீனமாகும்போது, ​​தலையில் அழுத்தம் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பலவீனமான பார்வை காரணமாக தலைவலி ஏற்படுகிறது. அப்படி இருந்தால் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். கண் சோர்வு காரணமாக தலைவலி ஏற்பட்டால், கண்களை பரிசோதிக்க வேண்டும்.

8 /8

பல நேரங்களில் மக்கள் அளவுக்கு அதிகமாக மருந்து சாப்பிடுகிறார்கள். வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் கடுமையான தலைவலி ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முடிந்தவரை மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.