வேலைக்காரன் பட பாணியில் ஓட்டுகேட்ட பிரதமர் மோடி!

கார்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் சிவகர்த்திகேயன் படமான வேலைகாரம் பட பாணியில் ஓட்டுகேட்ட பிரதமர் மோடி! 

Written by - Devaki J | Last Updated : May 7, 2018, 07:21 AM IST
வேலைக்காரன் பட பாணியில் ஓட்டுகேட்ட பிரதமர் மோடி!  title=

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பலயுக்திகளை கையாண்டு வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அங்கு இரு பெரும் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பாஜக காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக போராடி வருகிறது. 

இதை தொடர்ந்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக பல சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பெலகாவியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா "வாக்காளர்கள் ஓட்டுபோட வரவில்லை என்றால் அவர்களின் கை கால்களைக் கட்டி, தூக்கிக் கொண்டுவந்து பாஜக-க்கு ஓட்டுப்போட வையுங்கள்" என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாத்தி மாத்தி எதிர்கட்சிகளை குற்றம் கூறிவருகின்றனர். 

இந்நிலையில், நேற்று இரவு கார்நாடகவில் பிரச்சாரத்தில் ஈடுப்பாட் பிரதமர் மோடி, மக்களிடம் நீங்கள் பாஜக-விற்கு வாக்களியுங்கள் என கூறியுள்ளார். அதுமட்டும் இன்றி அவர் பாஜக-வுக்கு எத்தனை பேர் ஆதரவு தருகிறீர்கள். எங்களுக்கு ஆதரவு தந்தாள் உங்கள் கைகளில் உங்கள் தொலைபேசியை எடுத்து அதில் டார்ச் லைட் அடித்து ஆதரவு தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து, மக்களும் ஆதரவு தெரிவித்து டார்ச் லைட் அடித்துள்ளனர். 

 

Trending News