10-ம் வகுப்பில் 60% எடுத்த மகனை பாராட்டிய தாய்: வைரல் பதிவு

பத்தாம் வகுப்புத் தேர்வில் தன் மகன் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதை பெருமையுடன் பேஸ்புக்கில் பதிவேற்றினார் டெல்லியை சேர்ந்த பெண்மணி.

Last Updated : May 10, 2019, 04:50 PM IST
10-ம் வகுப்பில் 60% எடுத்த மகனை பாராட்டிய தாய்: வைரல் பதிவு title=

பத்தாம் வகுப்புத் தேர்வில் தன் மகன் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதை பெருமையுடன் பேஸ்புக்கில் பதிவேற்றினார் டெல்லியை சேர்ந்த பெண்மணி.

டெல்லியை சேர்ந்த வந்தனா சுபியா கடோச் என்ற பெண் தனது பேஸ்புக் பதிவில், ``என் மகன் 90% மதிப்பெண்ணைப் பெறவில்லை என்றாலும் இந்த 60% மதிப்பெண் எனது மகிழ்ச்சியை மாற்றிவிடவில்லை. சில பாடப்பிரிவுகளைப் படிக்க அவன் எவ்வளவு சிரமப்பட்டான் என்று எனக்குத் தெரியும். ஒன்றரை மாதங்கள் மட்டும் தீவிர கவனத்தோடு படித்து இந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளான்" என பெருமையோடு பதிவிட்டுள்ளார். 

 

அந்த பதிவுக்கு 15,000+ லைக்குகளும், 2,100 கமென்டுகளும், 7,500 ஷேரிங்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்தப் பதிவைப் படித்த பலரும் அந்த பெண்மணிக்கு பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Trending News