‘பாம்பெல்லாம் எனக்கு பஞ்சு மிட்டாய் மாதிரி...’ 300 பாம்புகளுடன் உலா வரும் நபர்

ஒரு பாம்பை பார்த்தாலே பதறிப்போகும் நபர்களுக்கு மத்தியில் 300 பாம்புகளுடன் அசால்டாக உலா வருகிறார் இந்த நபர். இந்த நபரின் வீடியோ வைரல் ஆனதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை!! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 12:40 PM IST
  • பாம்புகளுடன் அசால்டாய் உலா வரும் நபர்.
  • சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது இவரின் வீடியோ.
  • பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் சேர்த்து அளிக்கிறது இந்த வீடியோ.
‘பாம்பெல்லாம் எனக்கு பஞ்சு மிட்டாய் மாதிரி...’ 300 பாம்புகளுடன் உலா வரும் நபர் title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பொதுவாக ஒருவர் பாம்பை பார்த்தால், அந்த இடத்தில் இருந்து பதறி அடித்துக்கொண்டு ஓடி விடுவதுதான் வழக்கம். பாம்பைக் கண்டு பதறாதவர்களும் இருப்பார்களா? ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோ நிச்சயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

ALSO READ | 'முடிஞ்சா தொட்டுப்பார்.....' என பாம்பை பதறவைத்த கோழியின் வைரல் வீடியோ 

ஒரு நபர் சுமார் 300 பாம்புகளை ஒரு சாக்கு மூட்டையில் கொண்டு வந்து காட்டில் விடுவதை வீடியோவில் காண முடிகின்றது. ஒரே இடத்தில் இத்தனை பாம்புகளை பார்ப்பது நம்மை அச்சத்தில் தான் ஆழ்த்துகிறது. ஆனால் அந்த நபர் என்னவோ அசால்டாகத் தான் இருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்து இணைய வாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

சாக்குப்பையில் 300 பாம்புகள் 

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பச்சை வண்ண சாக்கு மூட்டையுடன் ஒருவர் காட்டுக்குள் செல்வதை காண முடிகிறது. அந்த சாக்கில் அதிக அளவில் பாம்புகள் உள்ளன. அந்த நபர் சாக்குப்பையை தரையை நோக்கி திருப்பி அனைத்து பாம்புகளையும் வெளியே விடுகிறார். 

அதுமட்டுமின்றி, கயிறுகளை துளாவுவதுபோல், அவர் பாம்புகளை (Snake Video) துளாவி, அவற்றைப் பிடித்து காட்டில் விடுகிறார். இறுதியில், இரு கைகளையும் கூப்பி வணக்கமும் செலுத்துகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

அதிர்ச்சியுடன் ஆச்சரியத்தையும் அளிக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meme wala (@memewalanews)

இந்தக் காணொளியை யார் பார்த்தாலும், அவர்களுக்கு சிலிர்த்துதான் போகும். இந்த வீடியோ memewalanews என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 300 பாம்புகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் பக்காவாக ரியாக்ட் செய்து வருகின்றனர். பல விதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் இல்லை. ஆனால் தற்போது இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அசால்டாய் பாம்புகளுடன் உலா வரும் இந்த நபர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்!!

ALSO READ | அட்ராசிட்டி தாத்தாவின் ஜாலி குத்தாட்டம்! வைரலான வீடியோவால் ஜெயிலுக்குள் சென்ற சோகம்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News