எனக்கு பசிக்கல... உயிரோட விடுறேன், தப்பிச்சு போங்க - புலியின் அசால்ட் வாக்

ஒரு புலி சாலையில் உலா வரும்போது, அங்கு நிற்கும் 2 மான்களை பார்த்தும் வேட்டையாடாமல் கடந்த செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 29, 2022, 06:02 PM IST
  • புலி மானை வேட்டையாடாமல் செல்லும் வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி ட்விட்டரில் பகிர்ந்தார்.
  • அந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
எனக்கு பசிக்கல... உயிரோட விடுறேன், தப்பிச்சு போங்க - புலியின் அசால்ட் வாக் title=

இணையத்தில் வனவிலங்குகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. காட்டு விலங்குகள், அதன் இரையை வேட்டையாடுவதைதான் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள், பார்க்கிறார்கள். ஆனால் ஒரு காட்டு விலங்கு அதன் இரையை புறக்கணிப்பதை நீங்கள் முன்னெப்போவாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால், இது நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். 

ஒரு புலி சாலையில் உலா வரும்போது, அங்கு நிற்கும் 2 மான்களை பார்த்தும் வேட்டையாடாமல் கடந்த செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில்,"புலிகள் தங்கள் இரையைக் கொல்வதில் உண்மையிலேயே சிக்கனமானவை. அவை, மானை கொன்றே ஆக வேண்டும் என வேட்டையாடுவதில்லை" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | பாம்புக்கும் முதலைக்கும் செம சண்டை: இப்படி ஒரு சண்டைய பார்த்திருக்க முடியாது

மேலும், அந்த வீடியோவில் புலி நடந்துபோவதை அங்கிருந்த மான் ஒன்று பார்க்கிறது, ஆனால் அது பதற்றமாகவில்லை. அந்த புலி வேறு திசையில் செல்வதை பார்த்து அந்த மான்கள் நிதானமாக வேறு திசையை நோக்கி நடந்தன. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்கும் போட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான ரீ-ட்வீட்களும் வரிசைக்கட்டுகின்றன. மேலும், சிலரோ இந்த வீடியோவை பகிர்ந்தற்கு அந்த வன அதிகாரிக்கு நன்றியும் தெரிவித்தனர்.

அதில் ட்வீட்டர் பயனாளர்,"மனிதர்கள் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு எந்த காரணமும் இல்லை, பருவமும் இல்லை. இயற்கையில், வலைகள் மிகவும் நுணுக்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலான சக்தியாக, நம்மை நாமே மாற்றிக்கொண்டோம், அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறோம். இதைப் பகிர்ந்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். "இதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. மனிதர்கள் மட்டுமே கணிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்" என மற்றொருவர் பதிவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | Viral Video: புத்தகப் பையில் கருநாகம்... அதிர்ச்சியில் உறைந்த மாணவி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News