Viral News: பூட்டை உடைத்து ஒன்றும் கிடைக்காமல் கடுப்பான திருடன் செய்த ‘வேலை’..!!

கஷ்டப்பட்டு பூட்டை உடைத்து, ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்து போன திருடர்கள், செய்த வேலை நிச்சயம் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 11, 2021, 06:15 PM IST
Viral News: பூட்டை உடைத்து ஒன்றும் கிடைக்காமல் கடுப்பான திருடன் செய்த ‘வேலை’..!! title=

தேவாஸ்: மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் ஒரு அரசு அதிகாரியின் வீட்டில் ஒரு திருடன் நுழைந்தபோது, ​​அவருக்கு தனக்கு பெரிய லாட்டரியே கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.  கஷ்டப்பட்டு பூட்டை உடைத்ததற்கு நிச்சயம் நல்ல பலன கிடைக்கும் என்ற ஆசையில், வீட்டிற்கு நுழைந்து வேட்டையை தொடங்கினர்.

இருப்பினும், வீட்டில் போதுமான பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கிடைக்காததால் ஏமாந்து போயினர். கடுப்பான திருடன், "பணம் நகை ஒன்றும் இல்லாத போது  வீட்டை ஏன் பூட்டி வைத்தாய்" என்று கேட்டு வீட்டில் உரிமையாளருக்காக ஒரு குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். திருடன் விட்டுச் சென்ற குறிப்பின் நகல் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. 

கடந்த 15-20 நாட்களாக வீட்டின் உரிமையாளரான திரிலோசன் கவுர், வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் திரும்பி வந்தபோது, ​​அவரது வீடு உடைக்கப்பட்டு அவரது தனிப்பட்ட உடைமைகள் தரையில் சிதறிக் கிடந்த பார்த்தது போலீஸிடம் புகார் அளித்தார். மாவட்ட ஆட்சியர்களுக்கான அதிகாரப்பூர்வ குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் உயர் போலீஸ் அதிகாரிகள் வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Viral Video: விஷ பாம்பை அசால்டாக கையாளும் 2 வயது குழந்தை..!!

இது கவுரின் இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பு, திருடர்கள் கையால் எழுதியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். திருடன் குறிப்பு எழுத அரசு அதிகாரியின் நோட் பேட் மற்றும் பேனாவைப் பயன்படுத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது FIR பதிவு  செய்யப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்து கோட்வாலி காவல் நிலையப் பொறுப்பாளர் உம்ராவ் சிங், கூறுகையில், வீட்டில்  30,000 ரூபாய் ரொக்கம் மற்றும் சில நகைகள் திருடப்பட்டதாக தெரிவித்தார். 

ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News