பாய் போட்டு படுத்திருந்த மலைப்பாம்பு - பக்கத்தில் குழந்தை... அதை பார்க்காத தாய் - பகீர் வீடியோ

Python Viral Video: மலைப்பாம்பு வந்தது தெரியாமல் தொட்டிலில் குழந்தையை தாய் தாலாட்டி கொண்டிருக்கும் பகீர் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 13, 2024, 06:08 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது.
  • இதனை இன்ஸ்டாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
  • இந்த வீடியோ கடந்த ஜூன் மாதம் பதிவேற்றப்பட்டுள்ளது.
பாய் போட்டு படுத்திருந்த மலைப்பாம்பு - பக்கத்தில் குழந்தை... அதை பார்க்காத தாய் - பகீர் வீடியோ title=

Python Viral Video: குழந்தையை தாய் பார்த்துக்கொள்வதை போன்று வேறு யாராலும் பார்த்துக்கொள்ள முடியாது. அதனால்தான், எப்போதும் தாய் குழந்தையின் பக்கத்திலேயே இருப்பார்கள். மனிதர்கள் என்றில்லை, மிருகங்களிலும் கூட தாய் கொடுக்கும் பாதுகாப்பை யாராலும் கொடுக்க முடியாது. எதிர்பார்ப்பு இல்லாத அந்த அரவணைப்பில் தாய்தான் சிறந்தவர் ஆவார்.

அப்படியிருக்கையில், குழந்தையை தாலாட்டிக்கொண்டிருக்கும் தாய்க்கே பெரிய ஆபத்து வருகிறது என்றால் அந்த நிலைமை சற்று யோசித்து பாருங்கள். ஆனால், அந்த நிலைமையிலும் ஒரு தாய் தனது குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என்றுதான் யோசிப்பாள். அதைதான் இந்த வீடியோவும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண்மணி, நீண்ட தொட்டிலில் குழந்தையுடன் தானும் படுத்துக்கொண்டு தாலாட்டு பாடிக்கொண்டிருக்கிறார். அந்த குழந்தையை தூங்க வைக்க அந்த தாய் தொடர்ந்து முயற்சிக்கிறாள். குழந்தை நன்கு அசந்த உடனே அந்த தொட்டிலில் இருந்து இறங்கி கீழே படுத்துக்கொண்டு தொட்டிலை ஆட்டி குழந்தை எழுந்துவிடாமல் ஆட்டிக்கொண்டிருக்கிறாள்.

மேலும் படிக்க | சுறா மீது குதித்து கடலில் சவாரி செய்த நபரின் வைரல் வீடியோ

அலறி அடித்து ஓடிய தாய்

குழந்தை தன்னிடம் பாதுகாப்பாக உணர்ந்து, தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருக்கிறது என நிச்சயம் அந்த பெண்ணின் மனதில் ஒரு மகிழ்ச்சி அந்த கணத்தில் பூத்திருக்கும். மகிழ்ச்சி மலர்ந்த அந்த கணத்திலேயே குழந்தைக்கு பின்புறம் ஒரு பெரிய மலைப்பாம்பு படுத்திருப்பதை பார்த்ததும் அந்த பெண்மணி அலறி அடித்துக்கொண்டு எழுந்துவிட்டாள். பாம்பை பார்த்த உடன் தன்னை உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர் ஓட்டம் எடுக்காமல் தொட்டிலில் படுத்திருந்த தனது குழந்தையை பாதுகாப்பாக தூக்கிவிட்டு தப்பித்து செல்கிறாள். 

இந்த வீடியோதான் இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ தொடங்கியதில் இருந்து சுமார் ஒரு நிமிடம் வரையிலும் அந்த பாம்பு அங்கயே தான் அசையாமல் இருக்கிறது. மலைப்பாம்பு என்பதால் எவ்வித சத்தமும் அவர்களுக்கு கேட்கவில்லை. நீண்ட நேரமாக தொட்டிலில் படுத்திருந்து, அதன்பின் இறங்கி குழந்தையை தாலாட்டிக்கொண்டிருந்தபோதுதான் அந்த பெண் அந்த பாம்பை பார்த்து பதறி அடித்து ஓடுகிறாள். 

இன்ஸ்டாவில் வைரலான வீடியோ

இந்த வீடியோவை முதல்முறை பார்க்கும்போது நிச்சயம் அங்கு மலைப்பாம்பு இருப்பதை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதுபோலவே தாயும் அந்த மலைப்பாம்பை பார்க்காமல் இருந்துள்ளார். இந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்துள்ளனர். இன்ஸ்டா மட்டுமின்றி பிற சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ba_plain_ba என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று பதிவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பெண்ணிடம் பல்பு வாங்கிய பாம்பு... யாருகிட்ட!! நம்ப முடியாத வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News