ஊழல் வழக்கில் முன்னாள் தென் கொரிய அதிபருக்கு 24 ஆண்டு சிறை

தென் கொரியாவின் முன்னாள் அதிபரான பார்க் ஹியூன் ஹெ மீதானா ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 24 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 6, 2018, 08:00 PM IST
ஊழல் வழக்கில் முன்னாள் தென் கொரிய அதிபருக்கு 24 ஆண்டு சிறை title=

தென் கொரியாவின் அதிபராக இருந்த போது பார்க் குன்-ஹே, தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி கடும் ஊழல் செய்தார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் தென் கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

முன்னால் அதிபர் பார்க் குன்-ஹே மீது கடும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. தென் கொரியாவுக்கு புதிய அதிபரும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் பார்க் குன்-ஹே மீதானா ஊழல் குற்றச்சாட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், பார்க் குன்-ஹே ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டது நிருப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு  24 வருட சிறைத்தண்டனையும், 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி கிம் சே-யோன்.

ஆனால் நீதிபதி தீர்ப்பு அளிக்கும் போது முன்னால் அதிபர் பார்க் குன்-ஹே நீதிமன்றத்துக்கு வரவில்லை. மேலும் தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த பார்க் குன்-ஹே, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

Trending News