நிதி பகிர்வு: தென்னிந்திய நிதியமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த தாமஸ் ஐசக்

தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. அது தொடர்பாக கலந்தாலோசித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்களுக்கு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் அழைப்பு விடுத்துள்ளார்.

Last Updated : Mar 27, 2018, 02:27 PM IST
நிதி பகிர்வு: தென்னிந்திய நிதியமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த தாமஸ் ஐசக் title=

15_வது நிதி கமிஷனில் கடைபிடிக்கப்பட்டுள்ள சில வரைமுறைகளுக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அது தொடர்பாக கலந்தாலோசிக்கவே தென் மாநில நிதியமைச்சர்களுக்கு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் அழைப்பு விடுத்துள்ளார்..

கர்நாடக முதல்வர் சித்தராமையா நிதி பாரபட்சத்திற்கு எதிர்த்து தெரிவித்திருந்தார். அவர், தனது வலைதளத்தில் தென் மாநிலங்களைப் பாதிக்கும் நிதி பரிந்துரையை நாம் நிச்சயம் எதிர்க்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா போன்ற மாநில முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுன்டுக்கு டேக் செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் டேக் செய்திருந்தார். இது ஊடகங்களில் மிகவும் விவாதிக்கப்பட்டது.

அதேபோல, நிதி பங்கீடு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தென் மாநிலங்களிலிருந்து பெறப்படும் வரி, தென் மாநிலங்களை விட அதிகமாக வட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது என குற்றம்சாட்டினார். 

இந்த விவகாரத்தை அடுத்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், தென் மாநில நிதி மந்திரிகள் அழைப்பு விடுத்துள்ளார். அவர் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களிலிருந்து பெறப்படும் வருவாய் குறைவுதான். வட மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கப்படுகிறது. தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவு என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார். மேலும் தென் மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், தென் மாநிலங்களின் வருவாய் மூலம் பெறப்படும் வரியை வடமாநிலங்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க ஆலோசனைக் கூட்டம் கேரள அரசு சார்பாக வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்மாநிலங்களை சேர்ந்த நிதியமைச்சர்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு என்.கே. சிங் தலைமையில் 15_வது நிதி கமிஷன் அமைக்கப்பட்டு மாநிலங்களுக்கு இடையே நிதி பங்கிட்டு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 2011-ல் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே நிதி ஒதுக்கீடு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுவே பிரச்சனைக்கு காரணம் என தென் மாநிலங்கள் கூறிவருகிறது.

Trending News