சுக்கிரன் புதன் இணைவதால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Lakshmi Narayan Yogam: சுக்கிரன் புதன் சேர்க்கையால் ஏற்படும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 7, 2022, 11:58 AM IST
  • புதன்-சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும்.
  • இந்த கலாத்தில் அதிக பணம் சம்பாதிப்பார்கள்.
  • வருமானம் அதிகரிக்கும்.
சுக்கிரன் புதன் இணைவதால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் title=

சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம்: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றுகிறது. அனைத்து கிரகங்களின் பெயர்ச்சியும் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும், இதனால் இவர்களது வாழ்வில் பல வித மாற்றங்கள் நிகழும். சிலருக்கு சுப யோகமும் சிலருக்கு அசுப யோகமும் உண்டாகும். வரும் நவம்பர் 11-ம் தேதி சுக்கிரன் கிரகம் விருச்சிக ராசியில் கோச்சாரம் ஆகவுள்ளார். இதற்கு இரண்டு நாட்கள் கழித்து, நவம்பர் 13 ஆம் தேதி, புதன் கிரகமும் விருச்சிக ராசிக்குள் நுழைகிறது. 

சுக்கிரன் மற்றும் புதன் கிரகம் விருச்சிக ராசியில் இணைவதால், லக்ஷ்மி நாராயண யோகம் உண்டாகும். புதன் - சுக்கிரன் இணைவு 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும், இந்த சேர்க்கையால் ஏற்படும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். ஆடம்பர வாழ்வை தருபவரான சுக்கிரனும், செல்வம் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான பலன்களை அளிப்பவரான புதனும் இந்த 3 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கவுள்ளார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

துலாம்: 

புதன்-சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இந்த கலாத்தில் அதிக பணம் சம்பாதிப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். திடீரென்று பணம் வந்து சேரும். இதுவரை சிக்கியிருந்த பணம் இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமாக இருக்கும். வாழ்வில் வசதிகள் பெருகும்.

மேலும் படிக்க | நவம்பர் மாதத்தில் யோகத்தை அளிக்கும் சூரியன் புதன் சுக்கிரன் பெயர்ச்சி! 4 ராசிக்கு சூப்பர் 

மகரம்: 

சுக்கிரன் சஞ்சாரத்தாலும், புதன் சஞ்சாரத்தாலும் உருவாகும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் மகர ராசியினருக்கு அபரிமிதமான பலன்களை அள்ளித் தரும். அவர்களின் வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றிலும் பண வரவு சாதகமாக இருக்கும். இந்த கலாத்தில் பல லாபகரமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உங்களுடைய பல நாள் ஆசைகள் நிறைவேறும்.

கும்பம்: 

நவம்பரில் சுக்கிரன் மற்றும் புதன் பெயர்ச்சியால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். தொழில், வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். வாழ்க்கையில் அதிகப்படியான முன்னேற்றம் ஏற்படும் காலமாக இது இருக்கும். 

பலவிதங்களில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். நிதி ஆதாயத்தால் நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவை பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நிலை மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பணியிடத்தில் முன்னேற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News