புத ஆதித்ய யோகத்தினால் பண மழையில் நனையும் அதிர்ஷ்ட ராசிகள் ‘இவை’ தான்!

Bhudha Aditya Yogam & LUCKY Zodiacs: புதன்  பிப்ரவரி 27, 2023 அன்று, கும்பத்தில் நுழைந்தார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், இதன் காரணமாக கும்ப ராசியில் சூரியன் - புதன் இணைவதால் புத-ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 28, 2023, 07:32 AM IST
  • சூரியன் - புதன் இணைவதால் புத-ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது.
  • சனியின் ராசியில் புத-ஆதித்ய யோகம் அமைவது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தருகிறது.
  • வேலையில் உயர்வைத் தரும். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும், அதில் வெற்றி பெறுவார்கள்.
புத ஆதித்ய யோகத்தினால் பண மழையில் நனையும்  அதிர்ஷ்ட ராசிகள் ‘இவை’ தான்! title=

ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் தங்கள் ராசியை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும். அப்போது இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுபமான ராஜயோகத்தை உருவாக்குகிறது. பிப்ரவரி 27, 2023 அன்று, புதன் சனியின் ராசியான கும்பத்தில் நுழைந்தார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், இதன் காரணமாக கும்ப ராசியில் சூரியன் - புதன் இணைவதால் புத-ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. சனியின் ராசியில் புத-ஆதித்ய யோகம் அமைவது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தருகிறது. இந்த கூட்டணி மார்ச் 15 வரை நீடிக்கும். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சிறப்பான பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

புதன் ராசி மாற்றம் 2023

மேஷம்: 

புதன் சஞ்சாரத்தால் உருவாகும் புத-ஆதித்ய யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் உயர்வைத் தரும். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும், அதில் வெற்றி பெறுவார்கள். தொழிலில் முதலீடு நன்மை தரும். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்: 

மார்ச் 15 வரை புதன் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அது உங்கள் வேலையில் எளிதாக வெற்றியைத் தரும். வருமானம் அதிகரிக்கும். சில பெரிய சாதனைகளை அடையலாம்.

மிதுனம்:

புத-ஆதித்ய யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இந்த நேரம் வணிகத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | மிதுன ராசியில் செவ்வாய்! பங்குனியில் பட்டையை கிளப்பப் போகும் ராசி இது தான்!

துலாம்:

இம்முறை மார்ச் 15 வரை துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகளும் தொடங்கும். தேர்வு-போட்டி, நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். பண வரவும் சாதகமாக இருக்கும்.

தனுசு:

புதன் சஞ்சாரத்தால் உருவாகும் புத-ஆதித்ய யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிய வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடன் பழகும் நபர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், உங்களைப் புகழ்வார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Traits: தன் நலனே முக்கியம் என செயல்படும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News