ரிஷப ராசியில் சூரியப் பெயர்ச்சி... ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிடப்போகும் இந்த 4 ராசிகள்!

Sun Transit 2023: வரும் மே 15ஆம் தேதி சூரிய பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இதனை ரிஷப சங்கராந்தி என அழைக்கின்றனர். இதனால், இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்கள் உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : May 8, 2023, 08:03 AM IST
  • மே 15ஆம் தேதி காலை 11.32 மணிக்கு சூரியன் ரிஷப ராசியில் பங்கேற்கிறார்.
  • இதனால், திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு ஆசைப்பட்ட வேலையும் கிடைக்கும்.
ரிஷப ராசியில் சூரியப் பெயர்ச்சி... ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிடப்போகும் இந்த 4 ராசிகள்! title=

Sun Transit 2023: வேத ஜோதிடத்தின்படி, சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும், ராசியை மாற்றி பெயர்ச்சி ஆகிறார். வரும் மே 15ஆம் தேதி அன்று, சூரியன் பெயர்ச்சியடைந்து ரிஷப ராசியில் பிரவேசிக்க உள்ளார். அதாவது, சூரியன் 1 வருடத்திற்கு பிறகு ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார். 

சூரியனின் சஞ்சாரம் சங்கராந்தி என பொதுவாக அழைக்கப்படும். இந்த மே 15ஆம் தேதி அன்று நிகழும் பெயர்ச்சி, ரிஷப சங்கராந்தி ஆகும். சூரியன் மே 15ஆம் தேதி அன்று காலை 11.32 மணிக்கு ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். அது அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். மறுபுறம், இந்த 4 ராசிக்காரர்கள் ரிஷப் ராசியில் சூரியன் பெயர்ச்சியடைவதால் பெரிதும் பலன்களைப் பெறுவார்கள்.

சூரியனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்

ரிஷபம்

சூரியன் ராசி மாறி ரிஷப ராசியில் பிரவேசிக்கப் போவதால் இந்த ராசிக்காரர்களுக்கும் பல நன்மைகளை தருவார். உங்கள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெரும் பண ஆதாயம் உண்டாகும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். 

மேலும் படிக்க | குரு உதயம்: இந்த யோகத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன், இந்த ராசிக்காரர்கள் எப்போதும் சூரிய பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த சூரிய சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். எந்த பெரிய சாதனையையும் அடையலாம். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செல்வமும் புகழும் அதிகரிக்கும்.

கன்னி

சூரியனின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தைத் தரும். வேலை தேடுபவர்கள் தங்கள் விருப்பப்படி வேலைவாய்ப்பைப் பெறலாம். புதிய வாய்ப்புகள் உங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும்.

மகரம் 

சூரியனின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு பொருளாதார பலம் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே சமயம் நினைத்த வேலை கிடைக்க வேண்டும் என்ற பலரின் கனவும் நிறைவேறும். வருமானமும் கூடும். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் அலட்சியப்படுத்தாமல் இருந்தால், இந்த நேரம் எல்லா வகையிலும் நன்றாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு:  இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே. ZEE NEWS எந்த வகையான அங்கீகாரத்தையும், தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. எந்தவொரு தகவலையும் அல்லது நம்பிக்கையையும் செயல்படுத்துவதற்கு முன், தொடர்புடைய நிபுணரை அணுகவும்.)

மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை பரிகாரங்கள்..! சூரிய பகவானின் அருளால் செல்வம் கிடைக்கும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News